Skip to main content

மாட்டு வண்டியில் பயணம் செய்த ராகுல்; வண்டி ஓட்டிய ஜோதிமணி!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

rahul gandhi election campaign

 

மூன்று நாள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்த முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தொடக்கமாக கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் 23ந் தேதி முதல் மூன்று நாள் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை தொடர்ந்தார்.

 

அதன் தொடர்ச்சியாக 25 ஆம் தேதி காலை, கரூரில் பல இடங்களில் மக்களிடம் பேசினார். யாரும் எதிர்பாராத வகையில் வாங்கல் என்ற இடத்தில் கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி இரட்டை மாட்டு வண்டியை ஓட்ட, அதில் ராகுல் காந்தி ஏறி நின்று பயணம் செய்தார். இதை திரண்டிருந்த மக்கள் உற்சாகத்துடன் பார்த்தனர்.

 

ராகுல் காந்தியின் மாட்டு வண்டிப் பயணமும், அதை காங்கிரஸ் பெண் எம்.பி.ஜோதிமணி ஓட்டியதும் கரூர் மக்களை வெகுவாகக் கவர்ந்தது.

 

 

சார்ந்த செய்திகள்