Skip to main content

பிரபாகரன் பிறந்த நாள்.. 65 பானைகளில் பொங்கல் வைத்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்! 

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அதிகமாகவே கொண்டாடி உள்ளனர். கடந்த ஆண்டுவரை பிரபாகரன் படங்கள் வைக்க தடை ஏற்படுத்திய போலீசார் இந்த ஆண்டு அரங்கங்களில் வைத்து பிறந்தநாள் கொண்டாட அனுமதித்துள்ளனர்.

 

 Prabhakaran's Birthday Celebration


புதுக்கோட்டை மாவட்டம் எப்போதும் விடுதலைப்புலிகளுடன் நேரடி தொடர்பில் உள்ள மாவட்டம். அதனால் தமிழ் ஈழ உணர்வாளர்களும் அதிகம் உள்ள மாவட்டம். அனைத்துக் கட்சிகளிலும் இருந்தாலும் ஈழ உணர்வு அதிகம் கொண்டவர்கள் என்பதால் பிரபாகரன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள். நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், உணர்வாளர்களும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
 

 Prabhakaran's Birthday Celebration

 

இந்தநிலையில் புதுக்கோட்டை காமராஜர்புரம் 6 ம் வீதியில் தமிழ்தேசியக் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தமிழ்நேசன் தலைமையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் 65 வது பிறந்தநாள் மற்றும் கட்சியின் 3 ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு 65 பானைகளில் பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்