Skip to main content

லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒருதலைப்பட்சமாக விசாரித்த போலீசார்;தீக்குளித்து பெண் இறப்பு;மரணப்படுக்கையில் ஆடியோ வாக்குமூலம் வெளியீடு!!

Published on 29/08/2018 | Edited on 29/08/2018

 

 

sucide

 

 

 

சென்னை திருவேற்காட்டில் கோலடி செந்தமிழ் நகரை சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மனைவி ரேணுகா. செவிலியரான இவருக்கும் அண்டைவீட்டில் வசித்துவரும் அமிர்தவள்ளிக்கும் இடையே சண்டை வந்துள்ளது. விசாரிக்கப்பட்டத்தில் ரேணுகா தனது வீட்டின் அருகே கழிவறை கட்டியுள்ளார் அதுதொடர்பாக இருவருக்கும் மோதல் முற்ற இந்த பிரச்சனை திருவேற்காடு காவல் நிலையம் வரை சென்றது.

 

sucide

 

இருதரப்பையும் விசாரித்த போலீசார் ரேணுகாவின் புகாரை ஏற்காமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக கூறப்பட்ட நிலையில் காவல் நிலையத்திற்கு வந்த ரேணுகா போலீசார் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக கூறி தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடனே அவரை மீட்ட போலீசார் அவரை தீ காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த ரேணுகா இன்று உயிரிழந்துள்ளார். 

 

sucide

 

 

 

 

sucide

 

 

sucide

 

 

 

இது தொடர்பாக நடந்த விசாரணையில் நான் தற்கொலை செய்து கொள்ள லஞ்சம் வாங்கிக்கொண்டு போலீசார் ஒருதலை பட்சமாக செயல்பட்டதே காரணம் என அவர் மரணப்படுகையில் அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரனிடம் உரையாடல் வாக்குமூலம் அளித்துள்ளார்.  

 

இதுதொடர்பாக நடத்திய  விசாரணையில் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள திருவேற்காடு ஆய்வாளர் அலெக்ஸாண்டர் மற்றும் துணை ஆய்வாளர் சரவணன் ஆகியோரை காத்திருப்பு பட்டியலில் வைக்க சென்னை பெருநகர ஆணையர் ஏ.கே விஷ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது