Skip to main content

பானி பூரியா? பான் மசாலா பூரியா? அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த புகார்!

Published on 21/02/2018 | Edited on 21/02/2018

பானி பூரி என்ற வடநாட்டு உணவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோர் அடிமையாகிக் கிடக்கின்றனர். காரமும், புளிப்பும் நிறைந்த இந்த நொறுக்குத் தீனி வேண்டாமென்போர் வெகுசிலரே. மலிவு விலையிலும், எளிதில் கிடைக்கக் கூடியதுமாக இருக்கும் இதை பலரும் விரும்புவதற்கு ஒரு முக்கியப் பொருள் சேர்க்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு வந்த புகார் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.  

 

paani

 

உணவுப் பாதுகாப்புத் துறைக்கு வந்த அந்த புகாரில், பானி பூரியில் சுவையூட்டுவதற்காகவும், அடிக்கடி அதை வேண்டுமென்று கேட்பதற்காகவும் அதில் பான் மசாலா எனப்படும் போதைப்பொருள் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பெரும்பாலான கடைகளில் உள்ள பானி பூரிக்களில் பான் மசாலாவின் மணமும், சுவையும் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பானி பூரி கடைகளில் கடுமையான சோதனையை நடத்தியுள்ளனர். பானி பூரி, புதினா நீர், பூரி பொரிக்க பயன்படும் எண்ணெயின் தரம் என பலவற்றையும் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

 

இந்த புகார் வந்ததை உணவுப் பாதுகாப்புத் துறையும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், மேலும் இதுபோல பிரச்சனைகள் உணரப்பட்டால் உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு தெரியப்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.