Skip to main content

வடகிழக்கு பருவமழை;கடலூரில் ஆய்வு!!

Published on 09/10/2018 | Edited on 09/10/2018

கடலூர் மாவட்டத்தில்  வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பல்வேறு இடங்களை மாவட்ட திட்ட கண்காணிப்பாளர் ககன்தீப்சிங்பேடி ஆய்வு செய்தார்.

 

தமிழக அரசின் முதன்மை செயலாரும், வேளாண்மைத்துறை செயலாருமான ககன்தீப்சிங் பேடி, கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ. அன்புசெல்வன் முன்னிலையில் நேற்று வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் கடலூர் முதுநகர் சுத்துக்குளம் பகுதி, சிதம்பரம் அருகே  உள்ள வீரன்கோவில் திட்டு, பெராம்பட்டு, குமராட்சி அருகே  நந்திமங்கலம், வீராணம் ஏரி, காட்டுமன்னார்கோவில் பகுதி, குறிஞ்சிப்பாடி பகுதி ஆகிய இடங்களில் உள்ள நீர்நிலைகள், சாலைகள்  மற்றும் கொள்ளிடக்கரை உள்ளிட்டவைகளை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

rain

 

பின்னர் அவர் சிதம்பரம் அருகே வீரன்கோயில்திட்டு என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

 

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு இன்றைய தினம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்துள்ளேன். 2015ம் ஆண்டு பருவ மழையினால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் நடப்பாண்டில் வடகிழக்கு பருமழையினால் பாதிப்பு ஏற்படா வண்ணம் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

கடலூர் மாவட்டத்திற்கு  வெள்ள பாதிப்பு பணிகளுக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளோம்.

 

rain

 

விவசாயிகளுக்கு பயிர் பாதிக்கக்கூடாது என்பதற்காக பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்த்தின் கீழ் பிரிமீயத் தொகையினை நவம்பர் 30க்குள் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்ட காரணத்தினால் உடனடியாக விவசாயிகள் இப்பயிர் காப்பீட்டு பிரிமீயத்தை செலுத்தினால் நவம்பர்30ம் தேதிக்குள் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டால் கணக்கீடு செய்யப்பட்டு உடனடியாக பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். எனவே அக்டோபர்15ம் தேதிக்குள் பயிர் காப்பீட்டுத் தொகையினை செலுத்தவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 2016-17ல் விவசாயிகள் பெருமளவில் பயிர்காப்பீடு தொகையினை செலுத்தப்பட்டுள்ளார்கள். அதன்மூலம் ரூ.3400 கோடி பயிர் காப்பிட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் 72 முதல் 80 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. சிதம்பரம் பகுதியில் 60 முதல் 70 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளது. வீரன்கோவில் திட்டு பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மழையால்பாதிக்கப்படுகிறது என்று நான் கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது இங்கு காங்கீரிட் தடுப்பு அமைக்கப்பட்டது. அதன் அருகிலே இந்த கிராமக்கள் செல்ல சிமண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த காங்கீரிட் தடுப்பால் சாலை பாதுகாக்கப்பட்டுள்ளது. சாலையின் அடுத்தபக்கத்திலும் காங்கீரிட் தடுப்பு அமைத்து வெள்ளபாதிப்பில் நிரந்தர தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறினார்.  

 

கடலூர் சார் ஆட்சியர் சரயூ, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொறுப்பு) மகேந்திரன், சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன்,சிதம்பரம்வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) வெற்றிவேல்,இணை இயக்குநர் (வேளாண்மை) அண்ணாதுரை, துணை இயக்குநர் (தோட்டக்கலை) ராஜாமணி, சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசு, அணைக்கரை உதவி செயற்பொறியாளர் அருணகிரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன்,சிதம்பரம் வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும்  விவசாய சங்க தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், விவசாய சங்க கூட்டியக்க ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.