Skip to main content

''என்னை வைத்து அவரை சிக்கலில் சிக்க வைத்துவிடுவார்களோ என்ற பயம் இருக்கிறது''-நளினி பேட்டி   

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

 "No one should get him into trouble" - Nalini interview

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட மிஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இந்நிலையில் இன்று சென்னையில் நளினி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், ''தமிழக அரசுக்கு மிக்க நன்றி. மத்திய அரசுக்கு மிக்க நன்றி. இந்த வழக்கை நடத்துவதற்கு உதவியாக இருந்த தமிழக மக்களுக்கு நன்றி. மக்கள் எங்கள் மீது அன்பைப் பொழிந்து இருக்கிறார்கள் இதுவரைக்கும். அவர்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி. ஒவ்வொரு தலைவர்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி. எனது மகள் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார். அவருடைய அப்பாவை சந்திக்க வேண்டும் என்று சொல்கிறார். நான் சிறையில் இருந்தேன் என்றுதான் பேரு, ஆனால் எப்போதும் என்னுடைய குழந்தை கூடவும், கணவர் கூடவும் தான் இருந்திருக்கிறேன். அவர்களையேதான் நினைத்துக் கொண்டிருப்பேன் எப்பொழுதும். எனவே அவர்களுடன் வாழ்ந்த மாதிரி ஒரு அனுபவம் இருக்கிறது. அது நிஜத்தில் இப்பொழுது நடக்க வேண்டும். எங்கள் விடுதலைக்காக போராடிய, குரல் கொடுத்த அனைத்து அரசியல் தலைவர்களையும் பார்த்து நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அதற்கான வாய்ப்பு இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை. ஹரித்ரா அப்பா கிளம்பினார் என்றால் அவருடன் கிளம்ப வேண்டி இருக்கும்.

 

எங்களுக்காக உயிர் கொடுத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அஞ்சலி செலுத்த வேண்டும். ஜெயலலிதாவின் சமாதிக்கு போக வேண்டும். கலாம் ஐயாவின் சமாதியைப் பார்க்க வேண்டும் என்ற பெரிய ஆசை இருக்கிறது. நான் சிறைக்குச் சென்ற முதல் நாளில் இருந்தே விடுதலை ஆகி விடுவேன் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் நிறைய அடி மேல அடி, இடி மேல் இடி என் தலையில் விழுந்து கொண்டே தான் இருந்தது அதை இல்லை என்று சொல்ல முடியாது. சொல்லப்போனால் என் வாழ்க்கையையே நான் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதைப் போன்ற சம்பவங்களும், தருணங்களும் சிறைக்குள் நடந்திருக்கிறது. நிறைய அந்த மாதிரியான தருணங்கள் இருந்தாலும் அடுத்த முயற்சி.. அடுத்த முயற்சி.. அடுத்த முயற்சி... என்று என்னுடைய வழக்கறிஞர்கள் என்னை தொடர்ந்து ஆதரித்ததால் என்னுடைய மனதைக் கொஞ்சம் கொஞ்சமாக தேற்றிக்கொண்டு அடுத்த கட்ட நகர்வுக்கு தயாரானேன்.

 

இந்த வழக்கில் நானும், எனது வீட்டுக்காரரும், அறிவும் முழு முயற்சி எடுத்து செயல்பட்டோம். ஆனால் 26 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைத்தது. அப்பொழுது எங்களுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும். அந்த மாதிரி தருணங்கள் நிறைய இருக்கிறது சிறைக்குள். என்னுடைய கணவர் இலங்கை தமிழர் எனவே உலகில் அனைத்து நாடுகளிலிருந்தும் அவருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். என்னுடைய கணவரை அகதிகள் முகாமிலிருந்து விடுவித்து என்னுடைய குழந்தையிடம் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைக்கிறேன். தமிழக முதல்வரை சந்திப்பது தொடர்பாக இனிமேல் தான் அவகாசம் கேட்க வேண்டும். ஆனால் பேரறிவாளன் முதல்வரை சந்தித்தபோது நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. அதுபோல் ஏதேனும் ஆகிவிடுமோ என்று அச்சம் இருக்கிறது. என்ன வச்சு அவரை சிக்கலில் சிக்க வைக்க கூடாது யாரும். அந்த ஒரு பயம் இருக்கிறது. இதில் அறிவு கிட்ட இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். அதனால் நான் தயங்குகிறேன். சோனியா காந்தி, பிரியங்கா காந்தியை பார்க்க தயக்கம் இருக்கிறது. அவர் அவருடைய அப்பாவை இழந்து விட்டார்கள். அந்த வழக்கில்தான் நான் இருக்கிறேன். அப்படி இருக்கும் பொழுது அவர்கள் ரொம்ப வலியில் இருப்பார்கள் அல்லவா அதனால் அவர்களைச் சந்திக்க தயக்கம் இருக்கிறது. அவர்கள் விருப்பப்பட்டார்கள் என்றால் அவர்களை சந்திக்க தயார். பிரியங்கா காந்திக்காக விரதமெல்லாம்  இருந்தேன். அவர் என்னை சிறையில் நேரில் சந்தித்து விட்டுச் சென்ற பிறகு அவருக்கு ஏதும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.