Skip to main content

நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி மனு தள்ளுபடி

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
n

 

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி , உதவி பேராசிரியர் கருப்பசாமி, முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

 

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய நிர்மலாதேவியின் மனுவை தள்ளுபடி செய்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம். மேலும், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய முருகன், கருப்பசாமி மனுவையும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

 

m


அரசு தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று மனுதாரர்கள் நிர்மலாதேவி,  முருகன், கருப்பசாமி  ஆகியோர் வாதிட்டும், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற வழக்கில் விடுவிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் நிர்மலாதேவி தொடர்பான மூல வழக்கை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.


இதன்பின்னர் போலீசார் அழைத்துச்சென்றபோது நீதிமன்ற வளாகத்தில் உதவி பேராசிரியர் முருகன் அளித்த பேட்டியில்,  வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது வருத்தமளிக்கிறது.  இது சம்பந்தமாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்ய போவதாகவும் கூறினார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முருகன் உண்ணாவிரதம்!!!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

 Rajiv Gandhi Case - Murugan

 

முன்னாள் இந்திய பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்தவருமான ராஜிவ்காந்தி, 1991 மே மாதம் மனிதவெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் என 4 பேருக்கு மரண தண்டையும், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் என 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் கருணை அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஆயுள்தண்டனையாக குறைத்தது.


சுமார் 28 ஆண்டுகாலமாக சிறையில் இருப்பதால் தாங்கள் இரண்டு ஆயுள்தண்டனை காலத்தை கடந்துவிட்டோம், எங்களை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும், சட்டப்போராட்டம் நடத்தியும் வருகின்றனர். இதனை பாஜக அரசும், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும் கண்டுக்கொள்ளவில்லை.

இதற்கிடையில் சிறைக்கைதி முருகனின் தந்தை சில வாரங்களுக்கு கேன்சர் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிர் போராட்டத்தில் இருந்தபோது, தன் மகனுடன் வீடியோ காலில் பேச விரும்பினார். இதுதொடர்பாக முருகன் தரப்பில் சிறைத்துறை தரப்பில் அனுமதி கேட்டார் கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் முறையிட்டுயிருந்தார். அந்த வழக்கு நடக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். இப்போதும் அதுகுறித்த வழக்கு நடைபெற்றுவருகிறது.

 

 


இந்நிலையில், தான் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டுமென முருகன் தரப்பில் சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை முன்வைத்து கடந்த ஜீன் 2ந்தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். இந்த தகவலை 4 நாட்களுக்கு பின்பே சிறைத்துறை வெளியிட்டது. கடந்த 8 நாட்களாக சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென முருகனிடம், சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
 

Next Story

வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை!- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

nalini, murugan whatsapp video call chennai high court


நளினி மற்றும் முருகனை வாட்ஸ்- அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன்  சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத்  தாக்கல் செய்துள்ளார். அந்த  வழக்கில், இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம்  வாட்ஸ்- அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும். மேலும், லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். ஏற்கனவே, காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் முருகன் பார்ப்பதற்கு, தமிழக அரசு அனுமதிக்காததையும்   சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அயல்நாடுகளில் இருப்பதால், இது மத்திய வெளிவிவகாரத்துறை சம்பந்தபட்டது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.