Skip to main content

திருச்சிக்கு புதிய ஆம்னி பேருந்து நிறுத்தம்- புறக்கணித்த மாநில அரசு;கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு

Published on 16/09/2018 | Edited on 16/09/2018

 

new omni bus stand

 

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல மக்களிடம் கோரிக்கை எழுந்து கொண்டே இருக்க கடந்த தி.மு.க. ஆட்சியில் பஞ்சப்பூர் பகுதியில் இடத்தை தேர்வு செய்து பணிகள் ஆரம்பிக்கும் நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அடுத்து வந்து அ.தி.மு.க. ஆட்சியில் பஞ்சப்பூர் இடம் சரியான தேர்வு இல்லை என ரத்து செய்து விட்டு திருச்சி மத்திய சிறைச்சாலை அருகே கொண்டு வரலாம் என்று கடந்த 7 வருடங்களாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் இன்னும் வந்த பாடியில்லை.

 

இப்போது இருக்கும் மத்திய பேருந்து நிலையம் பெரிய நெருக்கடியான இடமாக இருக்கிறது. இத்தோடு தனியார் ஆம்னி பேருந்துகள் கொண்டு வந்து நிறுத்துவதால் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. அதுவும் தமிழகத்தின் மையப்பகுதியாக இருப்பதால், சென்னை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி கோவை என பல ஊர்களுக்கு தனியார் பேருந்து செல்வதால் வார கடைசி என்றாலே திருச்சியை தாண்டி செல்வது என்பது பெரிய சிரமாக இருந்தது. 

இதனால் ஆம்னி பேருந்து யூனியனும் எங்களுக்கும் தனி இடத்தை ஒதுக்கி கொடுங்கள் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தாலும் இதை அரசாங்கத்தின் சார்பில் கண்டு கொள்ளவே இல்லை. இது பொதுமக்களுக்கும், ஆம்னி ஓட்டுனர்களுக்கும் பெரிய தலைவலியாக இருந்தது. 

இந்த நிலையில் கடந்த மாதத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆம்னி பேருந்து யூனியன் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணியிடம் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காலியாக இருக்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான இடத்தை ஒதுக்கி தரும்படியும் அதற்குண்டான வாடகையை கொடுத்து விடுகிறோம் என்று பேசி கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இது குறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

thiruchy

 

இந்த நிலையில் திருச்சி ஜங்சன் வழியிலிருந்து மத்திய பேருந்து நிலையம் போகும் வழியில் இரயில்வேக்கு சொந்தமாக காலியிடங்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் இருந்த இடத்தை இரயில்வே நிர்வாகம் ராயல் தேவக்குமார் என்கிற ரயில்வே ஒப்பந்தகாரருக்கு டெண்டர் அடிப்படையில் ஒப்பந்தமுறையில் கொடுத்திருக்கிறது. அவர் ஆம்னி யூனியனிடம் பேசி. 100 ஆம்னி பேருந்து ஒரே நேரத்தில் வந்து போகிற வசதி மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தருகிறேன் என்கிற பேச்சு வார்த்தையின் அடிப்படையில் காலியாக இருந்த இடத்தை சுத்தம் பண்ணும் பணி வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

 

இது நாள் வரை ஆம்னி நிறுத்தத்திற்கு இருந்த பிரச்சனை இந்த இட ஒதுக்கீட்டீன் மூலம் மக்கள் நிம்மதியடைவர்கள். மாநில அரசு செய்ய வேண்டிய வேலையை மத்திய அரசின் இரயில்வே தன்னுடைய இடத்தை வாடகைக்கு கொடுத்து தக்கவைத்துக்கொண்டுள்ளது. 

இதே போன்று ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கும் ஒரு விடிவு பிறக்காதா என மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்…
 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து; 5 பேர் பலியான சோகம்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
incident for tirupur vellakoil car and govt bus

திருப்பூரில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே ஓலப்பாளையம் என்ற பகுதியில் திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே போன்று திருப்பூரில் உள்ள நல்லிக்கவுண்டன் வலசு என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தனது காரில் குடும்பத்தினர் 6 பேருடன் பயணம் செய்துள்ளார். இவர்கள் திருக்கடையூரில் உள்ள கோவிலுக்கு ஆன்மிக பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தான் ஓலப்பாளையத்தில் இன்று (09.04.2024) அதிகாலை நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே  காரில் பயணித்த இளவரசன் (வயது 26), சந்திரசேகரன் (வயது 60), சித்ரா (வயது 57), அறிவித்ரா (வயது 30) மற்றும் 3 மாத பெண் குழந்தை சாக்சி ஆகிய 5 பேரும் உயிரிழந்தனர். மேலும் சசிதரன் என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோயில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

'எனக்கு வேண்டாம் என் தம்பிக்கு சீட்டு கொடுங்க'-துரை வைகோவை ஆதரித்து கமல் பிரச்சாரம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'I don't want; to give seat to my brother' - Kamal campaign in support of Durai Vaiko

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் திருச்சியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், '' இந்தியாவில் எந்த இடத்தில் மத கலவரம் நடந்தாலும் தமிழ்நாட்டில் மிகக் குறைவு. அதுவும் திருச்சியில் இல்லை என்று சொன்னால் மிகை ஆகாது. நல்ல அரசு, நல்ல தலைமையின் அடையாளம் அது. அது தொடர வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

நான் மதிக்கும் மிக முக்கியமான புத்தகம் 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்' அந்த புத்தகம் பாதுகாக்கப்பட்டால் தான் நீங்கள் வணங்கும் மற்ற புத்தகங்கள் எல்லாம் பாதுகாக்கப்படும். எந்த புத்தகமாக இருந்தாலும் சரி. நான் மதம் சார்ந்த புத்தகங்களைப் பற்றி சொல்லவில்லை. அதை எழுதக்கூடாது, இதை படிக்கக்கூடாது என்று சொல்லும் பன்முகத்தன்மை, விரிந்த நோக்கம் இல்லாத எந்த அரசும் ஆபத்தானது. அவை குடியுரிமைச் சட்டங்கள் மற்றும் அரசியல் சட்டங்களின் மீது கை வைக்க தொடங்கும். அதைப்பற்றி விமர்சிக்க வேண்டியது என் கடமை. ஐந்தாண்டுக்கு ஒரு முறை அந்த கடமையை நீங்கள் செய்து கொண்டே இருந்தால்தான் நாடு நலமாக இருக்கும். நான் இங்கு சீட்டுக்காக வரவில்லை நாட்டுக்காக வந்திருக்கிறேன். எனக்கு ஒரு சீட்டு சின்ன பிள்ளையிலிருந்து கொடுத்து வைத்திருக்கிறீர்கள், இப்போது என் தம்பிக்கு சீட்டு கொடுங்க என கேட்கிறேன்.  '' என்றார்.