Skip to main content

 தென்காசி (தனி) பாராளுமன்றம் - கோளரங்கம் எப்படி.?.

Published on 18/03/2019 | Edited on 19/03/2019

 

நெல்லை மாவட்டத்திலிருக்கும் இன்னொரு பகுதியின் பாராளுமன்றத் தொகுதியான தென்காசி பாரளுமன்றம், தென்காசி கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் என்று மாவட்டத்தின் நான்கு சட்டமன்றங்களோடு அருகிலுள்ள விருதுநகர் மாவட்டத்திலிருக்கும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் என 6 சட்டமன்றங்கள் என்று போகிறது. தென்காசி பாராளுமன்றத்தின் கோச்சாரம்.

 

t

 

தற்போதைய இறுதிவாக்காளர் பட்டியலின் படி. சங்கரன்கோவில் பெண் வாக்காளர்கள், 122962, ஆண் வாக்காளர்கள் 11,7233 மூன்றாம் பாலினத்தவர் 4, வாசுதேவநல்லூர் ஆண் வாக்காளர்கள் 1,12082, பெண் வாக்காளர்கள் 11,4359 மூன்றாம் பாலினம் 12, கடையநல்லூர் வாக்காளர்கள் ஆண் 1,35,874 பெண் வாக்காளர்கள் 1,36443, இதரர் 3 தென்காசி ஆண் வாக்காளர்கள், 134169 பெண் வாக்காளர்கள் 1,37,902 இதரர் 5, ராஜபாளையம் ஆண் வாக்காளர்கள் 1,10941 பெண் வாக்காளர்கள், 1,16190, இதரர் 25, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் வாக்காளர்கள் 1,14,736 பெண் வாக்காளர்கள் 1,19709 இதரர் 39 பேர்கள் என பாராளுமன்றத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,72670.

 

ad

 

தேசம் சுதந்திரமடைந்த பின் 1957ம் ஆண்டு முதல் 2014 வரை 14 பார்லிமெண்ட் தேர்தல்கள் நடந்துள்ளன. 1957ம் ஆண்டு காங்கிரசின் சங்கரபாண்டியன் வெற்றி பெற்றார். 1962ம் ஆண்டிலும் காங்கிரஸின் சாமி வெற்றி பெற்றார். 1967ல் காங்கிரசின் ஆறுமுகம், 1971ல் காங்கிரசின் செல்லச்சாமி, 1971 முதல் 1991 வரை காங்கிரசின் அருணாசலம் தொடர்ந்து 5 முறையாக வெற்றி பெற்றார். பின்பு 1996ல் காங்கிரஸ் பிளவுபட்டு த.மா.க. என்றான நேரத்தில் அக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் ஆதரவாளரான அருணாசலம், தி.மு.க. கூட்டணியோடு வென்றார். ஆரம்பகாலம் தொட்டு 10 முறை காங்கிரஸே தென்காசியைத் தக்கவைத்திருந்தது. அதன் பின் தென்காசி தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியது. 2004ல் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்பாத்துரை வெற்றி பெற்றார். 2009 அ.தி.மு.க.வின் ஆதரவில் போட்டியிட்ட சி.பி.ஐ.யின் லிங்கம் எம்.பி.யானார் 2014ல் அ.தி.மு.க.வின் வசந்தி முருகேசன் சிட்டிங் எம்.பி.யானார். இது வரையிலும் தி.மு.க. நேரடியாகப் போட்டியிடாமல் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே களத்தில் நிறுத்தியது.

 

K. Krishnasamy - m.danush kumar

 

தற்போது தி.மு.க., கூட்டணிக் கட்சிகளோடு தனது வேட்பாளரான தனுஷ்குமாரை களமிறக்கியுள்ளது. அடிப்படையில் தி.மு.க. காரர்.

 

தென்காசி பாராளுமன்ற தொகுதியின் மொத்தமுள்ள வாக்காளர்களில் முன்னணி வாக்காளர்கள் தாழ்த்தப்பட்ட, சமூகத்தவர்கள், பி.ஆர். சமூகம், மற்றும் அருந்ததியர் சமூகம் என்று மொத்தம் 2,75849 வாக்காளர்கள், தேவர் சமூகத்தவார்கள் 2,24503 நாடார் சமூக வாக்காளர்கள் 169191 மற்றும் முஸ்லிம், யாதவர், முதலியார் என வாக்காளர்களின் எண்ணிக்கை வரிசைகள் போகின்றன.

 

கடந்த 2014 தேர்தலின் போது தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட புதிய தமிழகத்தின் டாக்டர் கிருஷ்ணசாமி 262,912 வாக்குகள் பெற்று வாய்ப்பை இழந்தவர். எதிர்த்துப் போட்டி யிட்ட அ.தி.மு.க.வின் வசந்தி முருகேசன் 4,24,586 வாக்குகள் பெற்று எம்.பி.யானார் காரணம், காங்கிரஸ், ம.தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரிந்து நின்றதால் வாக்குகள் சிதறின. தி.மு.க.வின் ஆதரவு வேட்பாளர் வாய்பபை இழக்க நேரிட்டது. தற்போது பிரிந்து இந்தக் கட்சிகள் தி.மு.க.வின் கூட்டணியில் வருவதோடு தி.மு.க. நேரடியாகவே பலத்துடன் கோதாவிற்கு வருவது உ.பி.க்களிடையே உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது.

 

Tenkasi

 

போட்டியிலிருக்கிற புதியதமிழகத்தின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, இம்முறை அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி மற்றும் தனது செல்வாக்குடன் மறுபடியும் போட்டியிலிருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணி தங்களுக்கு கை கொடுக்கும் என்று நம்பிக்கையிலிருக்கிறார்கள் பு.த.கட்சியினர். அதே சமயம், அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியை உருவாக்கிய டி.டி.வி. தினகரன், தனது கட்சி வேட்பாளராக பொன்னுத்தாயை களமிறக்கி களத்தை உஷ்ணமாக்கியுள்ளார்.

 

முன்முனை போட்டி. ஊசிக்கு ஊசி பாயுமா?. யாருக்கு வாய்ப்பு. என்ற எதிர்ப்பார்ப்புகள் பரபரக்கின்றன.

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.