Skip to main content

 தென்காசி (தனி) பாராளுமன்றம் - கோளரங்கம் எப்படி.?.

Published on 18/03/2019 | Edited on 19/03/2019

 

நெல்லை மாவட்டத்திலிருக்கும் இன்னொரு பகுதியின் பாராளுமன்றத் தொகுதியான தென்காசி பாரளுமன்றம், தென்காசி கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் என்று மாவட்டத்தின் நான்கு சட்டமன்றங்களோடு அருகிலுள்ள விருதுநகர் மாவட்டத்திலிருக்கும் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் என 6 சட்டமன்றங்கள் என்று போகிறது. தென்காசி பாராளுமன்றத்தின் கோச்சாரம்.

 

t

 

தற்போதைய இறுதிவாக்காளர் பட்டியலின் படி. சங்கரன்கோவில் பெண் வாக்காளர்கள், 122962, ஆண் வாக்காளர்கள் 11,7233 மூன்றாம் பாலினத்தவர் 4, வாசுதேவநல்லூர் ஆண் வாக்காளர்கள் 1,12082, பெண் வாக்காளர்கள் 11,4359 மூன்றாம் பாலினம் 12, கடையநல்லூர் வாக்காளர்கள் ஆண் 1,35,874 பெண் வாக்காளர்கள் 1,36443, இதரர் 3 தென்காசி ஆண் வாக்காளர்கள், 134169 பெண் வாக்காளர்கள் 1,37,902 இதரர் 5, ராஜபாளையம் ஆண் வாக்காளர்கள் 1,10941 பெண் வாக்காளர்கள், 1,16190, இதரர் 25, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் வாக்காளர்கள் 1,14,736 பெண் வாக்காளர்கள் 1,19709 இதரர் 39 பேர்கள் என பாராளுமன்றத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,72670.

 

ad

 

தேசம் சுதந்திரமடைந்த பின் 1957ம் ஆண்டு முதல் 2014 வரை 14 பார்லிமெண்ட் தேர்தல்கள் நடந்துள்ளன. 1957ம் ஆண்டு காங்கிரசின் சங்கரபாண்டியன் வெற்றி பெற்றார். 1962ம் ஆண்டிலும் காங்கிரஸின் சாமி வெற்றி பெற்றார். 1967ல் காங்கிரசின் ஆறுமுகம், 1971ல் காங்கிரசின் செல்லச்சாமி, 1971 முதல் 1991 வரை காங்கிரசின் அருணாசலம் தொடர்ந்து 5 முறையாக வெற்றி பெற்றார். பின்பு 1996ல் காங்கிரஸ் பிளவுபட்டு த.மா.க. என்றான நேரத்தில் அக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் ஆதரவாளரான அருணாசலம், தி.மு.க. கூட்டணியோடு வென்றார். ஆரம்பகாலம் தொட்டு 10 முறை காங்கிரஸே தென்காசியைத் தக்கவைத்திருந்தது. அதன் பின் தென்காசி தொகுதியை அ.தி.மு.க. கைப்பற்றியது. 2004ல் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்பாத்துரை வெற்றி பெற்றார். 2009 அ.தி.மு.க.வின் ஆதரவில் போட்டியிட்ட சி.பி.ஐ.யின் லிங்கம் எம்.பி.யானார் 2014ல் அ.தி.மு.க.வின் வசந்தி முருகேசன் சிட்டிங் எம்.பி.யானார். இது வரையிலும் தி.மு.க. நேரடியாகப் போட்டியிடாமல் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையே களத்தில் நிறுத்தியது.

 

K. Krishnasamy - m.danush kumar

 

தற்போது தி.மு.க., கூட்டணிக் கட்சிகளோடு தனது வேட்பாளரான தனுஷ்குமாரை களமிறக்கியுள்ளது. அடிப்படையில் தி.மு.க. காரர்.

 

தென்காசி பாராளுமன்ற தொகுதியின் மொத்தமுள்ள வாக்காளர்களில் முன்னணி வாக்காளர்கள் தாழ்த்தப்பட்ட, சமூகத்தவர்கள், பி.ஆர். சமூகம், மற்றும் அருந்ததியர் சமூகம் என்று மொத்தம் 2,75849 வாக்காளர்கள், தேவர் சமூகத்தவார்கள் 2,24503 நாடார் சமூக வாக்காளர்கள் 169191 மற்றும் முஸ்லிம், யாதவர், முதலியார் என வாக்காளர்களின் எண்ணிக்கை வரிசைகள் போகின்றன.

 

கடந்த 2014 தேர்தலின் போது தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட புதிய தமிழகத்தின் டாக்டர் கிருஷ்ணசாமி 262,912 வாக்குகள் பெற்று வாய்ப்பை இழந்தவர். எதிர்த்துப் போட்டி யிட்ட அ.தி.மு.க.வின் வசந்தி முருகேசன் 4,24,586 வாக்குகள் பெற்று எம்.பி.யானார் காரணம், காங்கிரஸ், ம.தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரிந்து நின்றதால் வாக்குகள் சிதறின. தி.மு.க.வின் ஆதரவு வேட்பாளர் வாய்பபை இழக்க நேரிட்டது. தற்போது பிரிந்து இந்தக் கட்சிகள் தி.மு.க.வின் கூட்டணியில் வருவதோடு தி.மு.க. நேரடியாகவே பலத்துடன் கோதாவிற்கு வருவது உ.பி.க்களிடையே உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது.

 

Tenkasi

 

போட்டியிலிருக்கிற புதியதமிழகத்தின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, இம்முறை அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி மற்றும் தனது செல்வாக்குடன் மறுபடியும் போட்டியிலிருக்கிறார். அ.தி.மு.க. கூட்டணி தங்களுக்கு கை கொடுக்கும் என்று நம்பிக்கையிலிருக்கிறார்கள் பு.த.கட்சியினர். அதே சமயம், அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியை உருவாக்கிய டி.டி.வி. தினகரன், தனது கட்சி வேட்பாளராக பொன்னுத்தாயை களமிறக்கி களத்தை உஷ்ணமாக்கியுள்ளார்.

 

முன்முனை போட்டி. ஊசிக்கு ஊசி பாயுமா?. யாருக்கு வாய்ப்பு. என்ற எதிர்ப்பார்ப்புகள் பரபரக்கின்றன.

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; பரப்புரையைத் தொடங்கும் முதல்வர்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Parliamentary elections approaching The CM mk stalin will start the campaign

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜ் போட்டியிட உள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக - காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Parliamentary elections approaching The CM mk stalin will start the campaign

இந்நிலையில். திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார். இதனையடுத்து 23 ஆம் தேதி திருவாரூரில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் மார்ச் 24 ஆம் தேதி தனது பரப்புரையைத் தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.