Skip to main content

காலமகளே! உன் காலில் மாலையாக விழுகிறேன் என் அண்ணனைக் காப்பாற்று: நாஞ்சில் சம்பத்

Published on 19/03/2018 | Edited on 19/03/2018
M.NATARAJAN




சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரது கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் செயல் இழந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி நடராஜனுக்கு மீண்டும் உடல்நல குறைவு ஏற்பட்டு குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

nanjil sambath

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் தனது டுவிட்டர் பக்கத்தில், 

''தேளாகக் கொட்டியது ஒரு செய்தி. முந்துதமிழ் காக்க முந்திவந்தவன், முள்ளிவாய்க்கால் முற்றம் கண்டவன், தமிழ் ஈழ தாகம் கொண்டவன், தன்மானமுள்ள அண்ணன் ம.நடராஜன் கவலைக்கிடம். கவலை என்னை கொத்தித் தின்னுகிறது. காலமகளே! உன் காலில் மாலையாக விழுகிறேன் என் அண்ணனைக் காப்பாற்று'' என கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்