Skip to main content

"என் பையன் இறந்துட்டானா?" - மாரடைப்பால் தாயும் உயிரிழப்பு!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

Mother dies of heart attack after hearing news of son's death ..!

 

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த கண்ணனூரைச் சேர்ந்தவர் கனகராஜ் (60). இவர், இப்பகுதியில் கால்நடை (தனியார்) மருத்துவராக வேலை பார்த்தார். கண்ணனூரில் இலை, வெற்றிலை வியாபாரமும் கடைத்தெருவில் வைத்து செய்துவந்தார். நேற்று தனது கடைக்கு எதிரே டீ சாப்பிட்டுவிட்டு வாகனத்தில் ஏறும்பொழுது மயக்கமடைந்து கீழேவிழுந்துள்ளார்.

 

Mother dies of heart attack after hearing news of son's death ..!

 

அவரை, உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அக்கம் பக்கத்தினர். ஆனால், அவர் பாதியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர் கூறினார். கடையில் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்த தாய், சரசம்மாளுக்கு மகன் கீழே விழுந்ததைப் பார்த்ததும் படபடப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மகன் இறந்த செய்தியைக் கேட்டு, மகனின் முகத்தைப் பார்த்த தாய் சரசம்மாள் (81), அதே இடத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

 

தாய் மகனின் அடுத்தடுத்த மரணம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்