Published on 20/10/2018 | Edited on 20/10/2018

இணையதள ஊடகங்கள் முறையற்ற வகையில் செயல்பட்டால் தடை செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரைமுறைப்படுத்தாத பத்திரிகைகள், ஆன்லைன் மீடியாக்களுக்கு அரசு ஊக்கம் தராது. கட்டுப்படுத்தும். ஆன்லைன் பத்திரிகைகள் முறையற்று செயல்படும் நேரத்தில் அதனை முழுமையாக தடை செய்கிற பணியை அரசு செய்யும். அதற்கு அரசு ஆலோசனை செய்யும் என்றார்.