Skip to main content

“எனது மனைவி உயிரோடு இருக்கும்போது...” -  கண்ணீர் விட்டு அழுத அமைச்சர் 

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 Minister CV Ganesan burst into tears on the platform thinking of his wife

கடலூர் மாவட்டம் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் சி.வி. கணேசன், அவரது திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2000 விதவைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கி சிறப்பித்தார். இதற்கான நிகழ்ச்சி கழுதூர் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன பெருந்துட்ட வளாகத்தில் நடைபெற்றது. 

இந்த விழாவில் நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகத்தின் உதவியுடன் இந்த தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் என்.எல்.சி. நிர்வாக பொறுப்பு அதிகாரி பாலச்சந்தர் நிர்வாக தலைவர் பிரசன்ன குமார், வெங்கடேஸ்வரா கல்விக் குழும தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் அவர்கள் தொகுதியில் உள்ள 2000 விதவை தாய்மார்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவச தையல் இயந்திரத்தை வழங்கினார். 

தையல் இயந்திரம் வழங்கிய பிறகு பேசிய அமைச்சர் சி.வி. கணேசன், “மனைவி இல்லாமல் நான் கஷ்டப்பட்டு வருவதை உணர்கிறேன். அதேபோல் தொகுதியில் கணவரை இழந்து வாடும் பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதையும் உணர்ந்து அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில் 2000 விதவை தாய்மார்களுக்கு தையல் இயந்திரத்தை வழங்கி உள்ளேன். திட்டக்குடி தொகுதியில் சுமார் 8000 விதவை தாய்மார்கள் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் தெரியவந்துள்ளது.

எனவே அப்படிப்பட்ட அனைவருக்கும் எனது சொத்தை விற்றாவது தையல் இயந்திரம் வழங்க உள்ளேன். காரணம் எனது மனைவி உயிரோடு இருக்கும்போது மனதில் கஷ்டங்கள் சங்கடங்கள் இருந்தாலும் அதை போக்கும் வகையில் அதிக நேரம் அவர் இந்த தையல் இயந்திரத்தை தான் பயன்படுத்திக் கொண்டிருப்பார். அதோடு அவர் என்னிடம், உங்களை நம்பி உள்ள திட்டக்குடி தொகுதி மக்களை கைவிட்டு விடக்கூடாது அவர்களுக்கு உதவி செய்து காப்பாற்ற வேண்டும் என்று கூறுவார். அப்படிப்பட்ட மனைவி இல்லாமல் நான் கஷ்டப்படுவதை உணர்கிறேன். அதேபோல் கணவரை இழந்து கஷ்டப்படும் தாய்மார்களின் கஷ்டத்தைப் போக்க பெரும் உதவியாக இருக்கும்  என்று அனைவருக்கும் தையல் இயந்திரம் வழங்குகிறேன்” என்று கூறியபடியே கண்ணீர் விட்டு அழுதார் அமைச்சர்.

அதைப் பார்த்த விழாவுக்கு வந்திருந்த பெண் பயனாளிகள் அனைவரும் கண் கலங்கினர். அதோடு அனைவரும், ‘நாங்கள் இருக்கிறோம் நீங்கள் கண்கலங்கி கஷ்டப்படக் கூடாது..’ என்று ஆறுதல் கூறினார்கள். நெகிழ்ச்சி பொங்க நடைபெற்ற இந்த விழாவில் கட்சியின் ஒன்றிய செயலாளர், மங்களூர் ஒன்றிய குழு தலைவர் சுகுணா சங்கர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

இளம் பெண் ரயில் நிலையம் அருகே கொடூரக் கொலை; பின்னணி என்ன ?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
A young woman from Chennai was passed away near Gudiyattam railway station

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா. 30 வயதான இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் திருமணமாகி விவாகரத்து பெற்று தனது தாயாருடன் வசித்து வந்தார்.

கடந்த 14ஆம் தேதி அலுவல் காரணமாக குடியாத்தம் சென்று வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு வந்தவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. எங்கே போனாலும் மகள் தினமும் தன்னுடன் பேசிவிடுவார் அப்படி இருக்க செல்போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். தன்னையும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர் பயந்து போனார்.

இதுகுறித்து அவரது தாயார் கடந்த 16ஆம் தேதி சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட புளியந்தோப்பு போலீசார் செல்போன் எண்களை ஆராய்ந்து அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குடியாத்தம் அடுத்த சின்ன நாகால் பகுதியை சேர்ந்த ஹேம்ராஜ் (25) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் கடையில் பணியாற்றி வந்த தீபா உடன் ஹேம்ராஜிற்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இளம் பெண்ணை தள்ளிவிட்ட வழக்கில் ஹேம்ராஜ் 11 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே இவரது மொபைல் எண்ணிற்கு தீபா குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு பேசிய ஹேம்ராஜ் தான் ரயில்வேயில் பணிக்காக தேர்வுக்காக தயாராகி வருவதாகவும் நீயும் ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அதற்கான புத்தகங்கள் தன்னிடம் உள்ளதாக கூறி கடந்த 14ஆம் தேதி குடியாத்தம் ரயில்வே நிலையத்திற்கு தீபாவை ஹேம்ராஜ் வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள மலையடிவாரத்திற்கு தீபாவை அழைத்துச் சென்று அங்கு தீபாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அங்கே இருவருக்கும் உருவான பிரச்சனையில் தீபா தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து சென்னைக்குச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து ஹேமராஜை கைது செய்த குடியாத்தம் போலீசார் கொலைக்கான காரணம் உண்மைதானா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலில் இருந்து ஒரு பெண்ணை கீழே தள்ளி கொலை குற்ற வழக்கில் சிறையில் இருந்தவன், ரயில்வே தேர்வு எழுதுகிறேன் என ஒரு படித்த பெண்ணிடம் சொல்ல இதை அவர் எப்படி நம்பினார்? இவன் சொல்வது உண்மையான காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிரமாக புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னையில் காணாமல் போன இளம் பெண் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.