ஐ.என்.எக்ஸ். நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தி கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ. போலீசார் கைது செய்திருப்பது அரசியல் உள்நோக்கமும், பழிவாங்கும் நோக்கமும் கொண்டதாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விசாரணைக்கு பலமுறை அவர் நேரில் சென்று ஆஜராகி இருந்தும் கூட, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று காரணம் கூறி, அவரது முன் ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது கைது செய்திருப்பது மத்திய பா.ஜ.க. அரசின் அரசியல் உள்நோக்கத்தோடும், பழிவாங்கும் போக்கோடும் நிகழ்ந்துள்ளது.
பா.ஜ.க. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி தினமும் தனது எழுத்தாலும், பேச்சாலும் விமர்சனம் செய்து வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குரலை தடுக்கவும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் உள்நோக்கத்தோடு மத்திய அரசு சி.பி.ஐ. அமைப்பை தவறாக பயன்படுத்தியிருக்கிறது. தினம் தினம் வெளிவரும் மத்திய பா.ஜ.க. அரசின் ஊழல்களை மறைக்கவும், பிரச்சினைகளை திசைத் திருப்பவும் இக்கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் குடும்பத்தினரை களங்கப்படுத்தவும், அச்சுறுத்தும் நோக்கத்துடனும் நிகழ்ந்துள்ள இக்கைதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கார்த்தி சிதம்பரம் கைது; பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை - திருநாவுக்கரசு
சார்ந்த செய்திகள்
Next Story
சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பு (படங்கள்)
சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் இன்று (11-03-24) காலை 11:30 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத் துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பங்கேற்றார்.
Next Story
'என் அனுபவத்தில் இவிஎம் நம்பிக்கையானது'- கார்த்தி சிதம்பரம் கருத்து
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இவிஎம் மெஷினுக்கு மாற்றாக வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. அண்மையில் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக விவிபேட் குறித்து சந்தேகங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவிஎம் மெஷின் நம்பிக்கையானது தான் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், விவி பேடை எடுத்து விட்டால் இவிஎம் நம்பிக்கையானது. என்னை பொறுத்தவரை எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் இதுவரை என்னுடைய அனுபவத்தில் எந்த தவறும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு வேறு கருத்து இருக்கிறது என்பதை நான் முழுமையாக அறிகிறேன்'' என்றார்.