Skip to main content

மக்கள் நீதி மய்யம் இரண்டாம் ஆண்டு துவக்க விழா; திருவாரூரில் திரும்பி பார்க்கவைத்த கமல்ஹாசன்

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

 

மக்கள் நீதி மையத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை திருவாரூர் தெற்கு வீதியில் நடத்தி அரசியல் பார்வையை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

 

k

 

திருவாரூரை தேர்வு செய்ய காரணம் தமிழகத்துக்கு குடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர் என்பதாலும், குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது  என்றும்தான் தேர்வு செய்தோம் என்று பேசினார் கமல்ஹாசன்.

 

கமல்ஹாசன் சமீப காலமாக திமுகவையும், அதிமுகவையும், பாமகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த வகையில் இன்று திருவாரூர் தெற்கு வீதியில் நடந்த கூட்டத்திலும் மறைமுகமாகவே அனைத்து கட்சிகளையும் சகட்டுமேனிக்கு சாடினார், திமுகவை சற்று அதிகமாகவே விமர்சித்து பேசியது திருவாரூர் நகர்வாழ் மக்களை சங்கடப்படவைத்தது.

 

k

 

 நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை மதுரையில் கடந்த ஆண்டு 2018ம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கினார். அப்போது  எப்போது தேர்தல் வந்தாலும் சந்திப்போம் என்றும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அதற்கேற்ப பாண்டிச்சேரியில் கட்சி கொடியை அறிமுகம் செய்து தேர்தலுக்கான கட்சி கட்டமைப்பை செய்துவந்தார், கட்சி துவங்கி இன்று ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று காலை  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றிவைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு நாகைக்கு வந்தார், அங்கு புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்கள் 159  குடும்பங்களுக்கு வலைகளை வழங்கினார்.

 

 அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் தெற்கு வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சியின் ஓராண்டு நிறைவு மற்றும் துவக்கவிழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு  திமுக அதிமுக பாமக என அனைத்து கட்சிகளையும் தனக்கே உரிய பாணியில் விமர்சித்து பேசினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என முதலில் அழைத்தது நான்தான்” - கமல்ஹாசன்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Kamal Haasan says I have already spoken to Vijay who has entered politics

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு இன்றைய நாளோடு 7ஆம் ஆண்டை நிறைவு செய்கிறது. அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ஆம் ஆண்டு துவக்க சென்னையில் இன்று (21-02-24) கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடியை சென்னை அலுவலகத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஏற்றினார். 

அதன்பின், கமல்ஹாசன் தனது கட்சித் தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர், “இந்தியாவிலேயே 40 சதவீதம் பேர் ஓட்டு போடாமல் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் ஓட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும். என்னை எல்லோரும் முழு நேர அரசியல்வாதியா? என்று கேள்வி கேட்கிறார்கள். ஆனால், ஓட்டு போடாமல் இருப்பவர்கள் முழு நேர குடிமகனாக கூட இருக்கவில்லை. எனவே, அனைவரும் வாக்களிக்க வேண்டும். முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை. என் சொந்த காசை வைத்து கட்சி நடத்துகிறேன். என்னுடைய அரசியல் பயணம் என்பது ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து அழுத்தமாக நடைபோட்டுக்கொண்டே இருப்பேன். அரசியலை விட்டு என்னைப் போக வைக்க முடியாது. 

நாட்டு மக்களிடம் குடியுரிமை ஆட்டம் கண்டுள்ளது. விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கையை சாலையில் போட்டுள்ளது ஒன்றிய அரசு. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக வேளாண் பட்ஜெட்டின் விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்துள்ள நன்மையில் 10% கூட ஒன்றிய அரசு செய்யவில்லை. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள் தான் ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ளார்கள். மாநிலங்களுக்கு சரியான வரிப்பகிர்வு அவசியம்” என்று பேசினார்

அதனை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கூட்டணி குறித்து நான் மட்டும் தனியாக சொல்ல முடியாது. மற்ற கட்சிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தான் கூற முடியும். கூட்டணி இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கட்சி அரசியலை தாண்டி நாட்டு நலன் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. அரசியலுக்கு வந்துள்ள விஜய்யுடன் ஏற்கெனவே பேசியிருக்கிறேன். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறிய முதல் வரவேற்பு குரல் என்னுடைய குரல் தான்” என்று கூறினார்.