Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; வாட்ஸ்ஆப் ஆடியோவால் சிக்கிய பெண்

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

kallakurichi district chinnasalem shopkeeper incident for whatsapp audio viral 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் தனது மனைவிக்கு ஆடியோவில் பேசி வாட்ஸ்ஆப்பில் தகவலை அனுப்பி விட்டு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அந்த ஆடியோவில் ரமேஷ் பேசியது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து ரமேஷின் அண்ணன் செந்தாமரைக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ரமேஷ் ஆடியோவில் பேசியதில், "23 லட்சம் பணம், 13 சவரன் நகை ஆகியவற்றை அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளேன். அவருக்காகத்தான் கடன் வாங்கினேன். ஆனால், தற்போது அவர் என்னை மிரட்டுகிறார். அவரால் நமது பிள்ளைகளுக்கு ஆபத்து. பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும். எனக்கு இதைத்தவிர வேறு வழி தெரியவில்லை" என்று பேசியிருந்தார்.

 

இந்த ஆடியோ குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் ரமேஷின் மளிகை கடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். அவர் வெளிநாடு சென்றுவிட்ட நிலையில், அவருக்கு பதிலாக அவரது மனைவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், தன் கடையில் வேலை செய்த கவிதாவுடன் ரமேஷ் பழகி வந்துள்ளார். மேலும், இந்த பழக்கத்தால் ரமேஷ் கவிதாவுக்கு 23 லட்ச ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். இது மட்டுமின்றி, தனது மனைவியின் 13 பவுன் நகையையும் கவிதாவுக்கு கொடுத்துள்ளார். இதன் காரணமாக கவிதாவும் ரமேஷும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். மேலும், ரமேஷ் தனது குடும்பத்தை மறந்து கவிதாவுக்காக தனது பணத்தை செலவு செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில், கவிதா வேறொரு ஆண்நண்பருடன் நெருக்கமாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ரமேஷை புறக்கணித்துள்ளார். இதுகுறித்து ரமேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கவிதாவை சந்தித்துக் கேட்டுள்ளார். அப்போது கவிதா ரமேஷை மிரட்டி உள்ளார். இதனால், தான் கொடுத்த பணம் மற்றும் நகைகளைத் திருப்பிக் கொடுக்குமாறு ரமேஷ் கேட்ட போது, "பணம் மற்றும் நகைகளைத் தர முடியாது. மீறி பணம் கேட்டால் உன் குடும்பத்தினரும் பிள்ளைகளும் பல விபரீதங்களைச் சந்திக்க நேரிடும்" என்று மிரட்டி உள்ளார். இதன் பிறகு ரமேஷ் தனக்கு கவிதா துரோகம் செய்ததாகக் கருதி, கொடுத்த பணமும் நகையும் போச்சு... கவிதாவும் துரோகம் செய்வதோடு மட்டுமல்லாமல் மிரட்டுகிறார். அவரிடம் பணம் உள்ளதால் எதையும் செய்வார். எனவே, தனது மனைவி, பிள்ளைகளை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்த கவிதா ரமேஷை தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள போலீசார் இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.