Skip to main content

''கடந்த இரண்டு வாரங்களாக மின்வெட்டு இருப்பது உண்மைதான்... ஆனால்...''-கே.எஸ்.அழகிரி பேட்டி!

Published on 01/05/2022 | Edited on 01/05/2022

 

 '' It is true that there has been a power outage for the last two weeks ... but ... '' - KS Alagiri interview!

 

சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலைவர் கீரன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் வீரமணி, திருமாவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கீரப்பாளையம் கிராமத்தில் வசித்து வரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது கிராம ஊராட்சியில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கிராம சபை கூட்டத்தில் பேசிய கே.எஸ். அழகிரி

 

தமிழ்நாடு அரசு ஊராட்சிகள் விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறார். அவரைப் போன்ற உணர்வு நம் ஒவ்வொருவருக்கும் இருக்குமேயானால் கிராமத்தில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரலாம்'' என்றார்.

 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மின்வெட்டு இருப்பது உண்மைதான். அதற்கான விளக்கத்தை முதலமைச்சரும், மின்துறை அமைச்சரும் சொல்லி இருக்கிறார்கள். நம்முடைய அனல் மின் நிலையங்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து நிலக்கரி வருவது குறைந்து விட்டது. பாஜக அரசு இதை முறையாகச் செய்திருந்தால் தட்டுப்பாடு வராது. அதில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை.15 தினங்களுக்கு முன்பு கூட நிலக்கரி உற்பத்தியை அதிகப்படுத்தக் கவனம் செலுத்த வேண்டும் என ராகுல்காந்தி சொல்லி இருக்கிறார். மோடி அதைச் சட்டை செய்யவில்லை.

 

 '' It is true that there has been a power outage for the last two weeks ... but ... '' - KS Alagiri interview!

 

வெளிநாடுகளிலிருந்து நிலக்கரியை மாநில அரசுகளே இறக்குமதி செய்து கொள்ளலாம் என்கிற திட்டத்தைக் கொண்டு வர இருக்கிறார்கள். அது நடைமுறைக்கு சாத்தியமில்லை. எரிவாயு, பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி 250 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில் இதை உயர்த்தியவர் மோடிதான். ஆனால் மாநில அரசு சிறிய அளவில் உயர்த்தினால் நீங்கள் தான் பொறுப்பு எனக் கூறுவது ஏற்க முடியாது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைத்தார். கடந்த 7 ஆண்டுகளில் 27 லட்சம் கோடி பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதித்து அவர்கள் வசூலித்து இருக்கிறார்கள். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை ஏறாமல் பார்த்துக் கொண்டார். ஏனென்றால் அவருக்குப் பொருளாதாரம் தெரியும். டீசல் விலை ஏறினால் விலைவாசி உயரும் என்பதும் அவருக்குத் தெரியும். ஆளுநர் என்பவர் ஒரு மாநிலத்திற்கு வந்தால் அந்த மாநில அரசாங்கத்தினுடைய உணர்வுகள், அந்த மாநில மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும். தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை விட அதிக அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டும் என நினைத்து செயல்பட்டால் தோல்வியில்தான் முடியும்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார்.