Skip to main content

என்னை கொல்ல பார்க்கிறது அரசாங்கம் - முகிலன் குற்றச்சாட்டு!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

சமூக செயற்பாட்டாளரும் இயற்கை வளங்களை பாதுகாக்க தொடர்ந்து போரடி வருபவருமான தோழர் முகிலன் கூடன்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு 296 ஆட்களாக சிறையில் இருந்து வருகிறார்.

 

 


ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளைங்கோட்டை சிறைக்கு வந்தவர்களிடம் போராட்டங்கள் குறித்து வழக்குகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி மீண்டும் போராட தூண்டி வருகிறார் என்று பாளைங்கோட்டை சிறையில் இருந்து ஜூலை 1ந் தேதி அதிகாலை நிர்வாக காரணங்களுக்காக என்ற பெயரில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
  The government looks to kill me - Comrade Mihailan!


 

 

 

மதுரை சிறையில் முகிலன் அடைக்கப்பட்டுள்ள வளாகத்திற்கு முன்பும் பின்பு மலக்குழிகள் உள்ளதாகவும் கொசுக்கள் அதிகமாக உள்ளது என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3ந் தேதி தேதி கூடன்குளம் வழக்கு விசாரணைக்காக வள்ளியூர் நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்ட போது வழக்கம் போல நீதிபதி பிணையில் போக விருப்பமா என்று கேட்ட போது சொந்தப் பிணையில் விடுவித்தால் செல்ல தயார் என்று முகிலன் சொன்னதால் அடுத்த வாய்தா 10 ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த முகிலன். என்னை கொல்ல அரசு திட்டமிட்டு உள்ளது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி பேட்டி அளித்தார். 

 

The government looks to kill me - Comrade Mihailan!


 

மேலும் அவர் கூறியதாவது, 

என்ன குற்றம் செய்தோம் நாங்கள். மலத் தொட்டிக்கு அருகே சிறை வைத்துள்ளார்கள். 10 நாட்களில் ஒரு மணி நேரம் கூட நிம்மதியாக தூங்கவில்லை. அரசே என்னை முன்பு கொல்லப் பார்த்தார்கள். ஆனால் இப்போது கொசுவை வைத்து என்னை கொல்ல பார்க்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் மட்டும் டெங்குவால் 150 பேர் இறந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் நமக்கு டெங்கு வருமோ, மலேரியா, சிக்குன்குனியா வருமோ என்று பயந்து பயந்து கொண்டிருகிறேன்.

 

 


லட்சக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகும் இடத்தில் என்னை அடைத்திருக்கிறார்கள். அரவக்குறிச்சியில் தேச துரோக வழக்கு போட்டிருக்கிறார்கள். அடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ம் என்றால் சிறை.. ஏன்? என்றால் துப்பாக்கிச் சூடு. இந்த அவலத்தை முறியடிப்போம். 1990களில் ஜெ. 18 லட்சம் பேர் மீது வழக்கு போட்டார். அடுத்து 1996 ல் தோற்றார். அடுத்து 2002ல் பொடா என்றார் 2004 ல் பாராளுமன்றத் தேர்தலில் மண்ணை கவ்வினார். 


  The government looks to kill me - Comrade Mihailan!


 

இப்போது பசுமை வழிச்சாலை, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்ப்பன், மீத்தேன், மணல் கொள்ளை, இயற்கை வளங்கள் திருட்டு என்று நாசகாரத் திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தையும் தமிழினத்தையும் கருவறுக்கும் வேலையை செய்து வருகிறார்கள். தங்களுக்கு வருமானம் வந்தால் போதும் என்று பார்க்கும் அரசாங்கம் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.

எங்களை விட்டுவிடுங்கள். ஆனால் 10 ஆண்டுகளாக மக்கள் போராடுகிறார்கள். அது அரசாங்கங்களின் காதுகளில் விழவில்லை. விரைவில் தமிழகம் மாற்றங்களை காணும். தமிழினத்தை கருவறுக்க முடியாது. ஆட்சியில் உள்ளவர்கள் அழிந்து போவார்கள் என்று சாபமிட்டார்.

 

The government looks to kill me - Comrade Mihailan!mukilan


 

மதுரை சிறையில் கொசுக்கடி, வளாக மாற்றம் பற்றி நீதிபதியிடம் கேட்டீர்களா என்ற கேள்விக்கு.. சுகாதாரமான இடத்திற்கு மாற்ற வேண்டும். மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று மதுரை சிறை நிர்வாகத்திற்கு வள்ளியூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றார். ஒவ்வொரு முறையும் முகிலனை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது ஊடகங்களிடம் பேசிடாமல் வேகமாக தள்ளிக் கொண்டு செல்லும் போலீசார் நேற்று அவரை பேட்டி அளிக்க விட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.