Skip to main content

'காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரப் பதிவாளர் வேண்டும்' - பேராசிரியர் சங்கத்தினர் போராட்டம்

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

Gandhigram University wants a permanent registrar-Professors union protest

 

காந்திகிராமம் பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரப் பதிவாளரை நியமிக்க வேண்டும் என காந்திகிராமம் பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கத்தினர் அமைதியான முறையில் கருப்பு முகக்கவசம் மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலைக்கழகப் பதிவாளராகப் பொறுப்பேற்ற வி.பி.ஆர்.சிவக்குமார் 5 ஆண்டுக்காலம் பதவி வகித்து நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் 6 மாதக்காலம் அவருடைய பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அவருடைய பதவிக்காலம் 09.04.2023 அன்று முடிவுற்ற நிலையில், தொடர்ந்து 2வது முறையாக அவருக்கு 3 மாதக்காலம் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டது. இதையறிந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கத்தினர் கடந்த 10.04.2023 அன்று மதியம் 1 மணியளவில் பல்கலைக்கழக பெல் மைதானம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தனியாக கூட்டமைப்பினர் 17ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

 

அதன்படி திங்கள் கிழமை மதியம் 1 மணியளவில் பல்கலைக்கழக பெல் மைதானம் முன்பு பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பேராசிரியர் சங்க தலைவர் ராஜா (எ) பிரான்மலை தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் மணிவேல் முன்னிலை வகித்தார். செயலாளர் சண்முகவடிவு வரவேற்று பேசினார். பேராசிரியர் சங்கத்தினர் வாயில் கருப்பு முகக்கவசம் அணிந்து, கருப்பு பேட்ஜ் அணிந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அப்போது பேசிய போராட்டக்குழு தலைவர் ராஜா, 2வது முறையாக பல்கலைக்கழகப் பதிவாளருக்கு பதவி நீட்டிப்பு செய்ததை ரத்து செய்ய வேண்டுமென்றும், பல்கலைக்கழகத்திற்கு நிரந்தரப் பதிவாளரை நியமிக்க வேண்டும் எனவும் கோசமிட்டதோடு, பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழு, திட்டமிடல் மற்றும் கண்காணிப்புக் குழு, கல்வியியல் குழு, நிதிக்குழு ஆகியவற்றின் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்றும், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்கத்திற்கு நிதிகளை முறையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், பேராசிரியர்கள் குடியிருப்புகளை முறையாகப் பராமரிப்பு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

 

Gandhigram University wants a permanent registrar-Professors union protest

 

அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை அறிந்த போராட்டக்குழுவினர் நாளை முதல் மதியம் 1 மணிக்கு பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் மகாதேவன், நிர்வாக கமிட்டியை சேர்ந்த சத்யா, ராமசுப்பு, அறிவழகன், டேவிட் ஜெயராஜ் பிராங்க்ளின் உட்பட 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

இது குறித்து போராட்டக்குழுவினர் கூறுகையில், பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தர் குர்மித் சிங் அவர்கள் 11ம் தேதி செவ்வாய் கிழமை மாலை 4 மணி அளவில் காணொளி காட்சி மூலம் பேராசிரியர் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆசிரியர்கள் அந்த பணியை மட்டும் தான் செய்ய வேண்டும் மற்றபடி நிர்வாக முடிவுகளில் தலையிடக்கூடாது எனப் பேசியுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த பேராசிரியர் சங்கத்தினர் எந்த பல்கலைக்கழக விதியின் அடிப்படையில் நீங்கள் பல்கலைக்கழகப் பதிவாளர் வி.பி.ஆர்.சிவக்குமாருக்கு 2வது முறையாக பதவி நீட்டிப்பு செய்துள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பியதோடு, நீங்கள் முறைப்படி நடந்திருந்தால் நாங்கள் இந்த போராட்டம் நடத்தி இருக்க மாட்டோம் எனக் கூறியதோடு பல்கலைக்கழகப் பதிவாளருக்கு 2வது முறையாக நீட்டிப்பு செய்திருப்பதை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்துவோம் எனச் சொல்லியதை அடுத்து 17.04.2023 முதல் தொடர்ந்து அகிம்சை வழியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

 

பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் போராட்டத்தினால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேராசிரியர்களுக்கு ஆதரவாக அலுவலர்கள் சங்கத்தினரும், மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.