Skip to main content

நண்பனை குத்தி கொலைசெய்து வீட்டு வாசலில் புதைத்த நண்பர்கள்; காரைக்காலில் பரபரப்பு

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

இரண்டு வாலிபர்கள் சேரந்து நண்பனை கொலை செய்து வீட்டு வாசலில் புதைத்த சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

 

காரைக்கால் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லாஹ், அவரது மகன் ஹாஜாஷெரிப், இவரை சில நாட்களாக காணவில்லை, என பதறிய அவரது பெற்றோர் டவுன் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து ஹாஜாஷெரிபை தேடிவந்தனர். அவரது நண்பர்களே கொலை செய்ததாக தகவல்கள் காரைக்கால் முழுவதும் கசியத் தொடங்கின. 

 

murder

 

சந்தேகத்தின் பேரில் நண்பர்களான காரைக்கால் கோவில்பத்து பகுதியை சேர்ந்த சிவநேசன் 28, ஆனந்த் 26, ஆகிய இருவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவா, விவேக் ஆகியோருடன் சேர்த்து ஹாஜாஷெரிபை அடித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்து கோட்டுச்சேரியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு புதைத்ததாக தெரிவித்து பகீர்கிளப்பினர்.

 

அவர்கள் காவல்துறை விசாரணையில் கொலை செய்தது ஏன் என்று கேட்டபோது, " கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் செல்வா என்பவன் காரைக்கால் கோட்டுச்சேரி அருகே நந்தா நகரில் நண்பர்களுடன் தங்கி ரேடியாலஜி படித்து வருகிறான். செல்வாவும் சிவாவும் நண்பர்களாக பழகினர்.  அதனால் சிவாவும் அவரது நண்பர்களான விவேக், சிவசேனான், ஆனந்த், ஷெரீப் உள்பட நான்கு நண்பர்களும் அந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 

 

murder

 

விவேக் மற்றும் ஹாஜாஷரிப் மீது காரைக்கால் பகுதியில் திருட்டு, கொள்ளை வழக்குகளும் உள்ளன. இவர்கள் இருவரும் சிறையில் இருந்தபோது இருவரில் யார் பெரியவன் என்கிற போட்டி ஏற்பட்டிருக்கிறது. இரண்டு பேரும் ஜாமீனில் வெளியே வந்ததும், வழக்கம்போல மது அருந்தும் இடத்தில் சிறையில் ஏற்பட்ட போட்டி குறித்து மற்றொரு நண்பன் சிவாவிடம் விவேக் கூறியிருக்கிறான். இதை பெரிதுபடுத்தாமல் அவனும் நம்ம நண்பன் தானே என்று விட்டு விட்டான். 

 

 police

 

சில வாரங்களுக்கு முன்பு நந்தா நகரில் உள்ள வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்தனர். யார் பெரிய ஆள் என்கிற போட்டி அங்கு ஏற்பட்டு மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது சிவா ஆனந்த் உள்ளிட்டோர் அங்கிருந்து கட்டையாலும், சரமாரியாக கத்தியாலும் குத்தி கொலை செய்து புதைத்தோம்." என்று அதிர்ச்சி கரமாக கூறினர்.

 

இரண்ட பேரையும் போலீசார் அழைத்து சென்று உடல் புதைக்கப்பட்ட இடத்தை காட்ட செய்து, தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு,அங்கேயே கூராய்வு செய்து செய்தனர்.

 

இந்த சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் அதிர்ச்சி கலந்த பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.