Skip to main content

'ஐந்து மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்!

Published on 28/11/2021 | Edited on 28/11/2021

 

'Five districts likely to receive heavy rains today' - Meteorological Center

 

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இன்று (28/11/2021) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிக கனமழை பெய்யலாம். 

 

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் இன்று கனமழை பெய்யலாம். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நவம்பர் 30- ஆம் தேதி முதல் மழை குறைய வாய்ப்புள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த கடல் பகுதிகளுக்கு வெல்ல வேண்டாம்" என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

 

இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தெற்கு அந்தமான் வங்கக்கடல் பகுதியில் நாளைக்கு (29/11/2021) பதில் நவம்பர் 30- ஆம் தேதி அன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும். நவம்பர் 30- ஆம் தேதி அன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவான பின் வடமேற்கு திசையை நோக்கி நகரும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

சார்ந்த செய்திகள்