Skip to main content

மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு!

Published on 10/05/2021 | Edited on 10/05/2021

 

Extension of opportunity to pay electricity bills!

 

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (10/05/2021) காலை 04.00 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை 15 நாட்களுக்குத் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.  

 

இந்நிலையில் மின் கட்டணம் செலுத்த மே 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள், மின் கட்டணம் இதர நிலுவைத் தொகை செலுத்த மே 31-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி நாள் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை இருப்பின் மே 31-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம். ஆன்லைன், பேமென்ட் கேட்வே, பிபிபிஎஸ் மூலம் மின் கட்டணத்தைச் செலுத்தலாம் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்