Skip to main content

பிஜேபி மீண்டும் ஆளுகிற நிலை வந்தால் தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது - திருமாவளவன். 

Published on 24/01/2019 | Edited on 24/01/2019
thirumavalavan

 

தேசம் காப்போம் என்கிற தலைப்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் இராணுவ மைதானத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த கூட்டத்தின் கடைசியில் நிறைவுறுரை ஆற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில்,

 
இந்த மாநாட்டை தடை செய்ய சனாதன சக்திகள் காவல் துறையை அணுகி மனு அளித்தார்கள். ஆனால் தடைகளின் போதுதான் விடுதலைசிறுத்தைகள் திரண்டு வந்திருக்கிறார்கள். இந்த மாநாடு திமுக தேர்தல் கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம். திமுக மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது. தோழர் ரவிக்குமார் குறி வைக்கப்பட்டிருக்கிறார். சனாதன் சன்ஸ்தா அமைப்பும் இந்த மாநாடு வெற்றியடைய காரணம். இந்து முற்போக்குவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 
 

காங்கிரஸ் ஆட்சியில் சனாதனிகள் வாய் பேசவில்லை. மோடி அரசில் அவர்கள் கொட்டமடிக்க களம் அமைத்து தந்திருக்கிறார்கள். தலித், கிறித்துவர், இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. வளர்ச்சி அடைந்தது யார் சனாதனிகள், அதானி, அம்பானி வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மீண்டும் ஆளுகிற நிலை வந்தால் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. ஹெச்.ராஜா போன்றோரெல்லாம் பெரியாரை விமர்சிக்கிறார். ஹெச்.ராஜாவுக்கு இந்த மாநாடு ஒரு பாடம். இது அம்பேத்கர், பெரியாருக்கு கிடைத்த வெற்றி. 
 

சனாதானத்துக்கு எதிரான போராட்டத்தை பெரியாரும், அம்பேத்கரும் முன்னெடுத்தார்கள். கௌதம புத்தர் சனாதனத்தை எதிர்த்தார். புத்தரின் காலத்திலிருந்து சமத்துவத்துக்கான, சகோதரத்துவத்துக்கான போராட்டம் துவங்கியது. சகோதரத்துவத்தால் சமத்துவம், சமத்துவத்தால் ஜனநாயகம் உருவாகும். சமத்துவத்தை வெறுப்பது சனாதனம். எல்லா ஜாதிக்குமிடையில் பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிப்பது சனாதனம். தாத்ரியில் இஸ்லாமியரை கொன்றது, அக்லாக்கை கொன்றது, பொது இடங்களுக்கு பெண்கள் செல்வதை தடுப்பது, அனுமதி மறுப்பது சனாதனம். சனாதனத்தின் உயிர், பாகுபாடுகளை பாதுகாப்பதில்தான் அடங்கியிருக்கிறது. பெண்களை சனாதனத்தின் வாயிலாக அடக்கி வாரிசுரிமை, மறுத்து பெண்ணுரிமை மறுத்த கோட்பாடு சனாதனம்.
 

வருணாசிரம், சனாதன தர்மத்துக்காக பெண்களை ஒடுக்கிய கோட்பாடு. குலத்தொழிலை தூக்கிப்பிடிப்பது சனாதனம். ஜோதிராவ் பூலே பெண்களுக்காக பள்ளிக்கூடம் உருவாக்கியவர். சாவித்திரி பூலே அதற்காக கல்லால் அடிக்கப்பட்டார். தனிச்சுடுகாடு நிலவுகிறது. தனி சேரி நிலவுகிறது. தேர்தல் களத்தில் தனித்து நிற்கிறோம். அப்படி நிற்கும் போது சமத்துவபுரத்தை உருவாக்கியவர் கலைஞர். All priest become archagars சட்டத்தை உருவாக்கியவர் கலைஞர். கேரளாவில் இதை சட்டமாக்கி இருக்கிறார்கள். கலைஞருக்கும், பெரியாருக்கும் இணைப்பு பாலமாக அண்ணா விளங்கினார் எனக் குறிப்பிட்டார்.
 

பதிணென் சித்தர்கள், பசவன்னா, நாராயணகுரு, வைகுண்டர் , அவ்வையார், திருவள்ளுவர் என அனைவரும் சனாதனத்தை எதிர்த்தனர். இவர்களை எல்லாம் ராஜா போன்றோர் எதிர்க்க முயல்கிறார்கள். அவர்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. விசிக, மார்க்சிஸ்ட் போன்றோர் ஒரு பாதையில் பயணிக்கிறார்கள். அகில இந்திய அளவில் தில்லு முல்லு செய்தாவது ஆட்சியை பிடிக்க எண்ணுகிறார்கள். சனாதன vs ஜனநாயக கோட்பாடுக்கு இடையே யுத்தம் நடக்கிறது. ஊழலால் நாட்டுக்கு ஆபத்து உண்டு. அதானி, அம்பானியால் கொழிக்கிறார்கள். கார்ப்பரேட்டுகள் ஆளுகிறார்கள். அவர்களின் அரசாக மோடி அரசு ஆளுகிறார். சனாதனத்தால் வருகிற ஆபத்து மிக தீங்கானது. சனாதன இந்தியாவை கட்டமைப்பது அவர்களின் நோக்கம். கம்யூனிஸ்ட்கள் பயங்கரவாதிகளாகவும், விசிக மீது வன்முறையாளராக சித்தரிக்கிறார்கள்.. சனாதன் சன்ஸ்தா மீது நீதிமன்றமும் குற்றத்தை உறுதிபடுத்துகிறது. நாற்பதுக்கு நாற்பது வெற்றி பெறுவோம். அதன் மூலம் மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய அனைத்து கட்சிகளின் ஆதரவோடு செயல்படுவோம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.