Published on 30/04/2018 | Edited on 30/04/2018
![cvsanmugam](http://image.nakkheeran.in/cdn/farfuture/HhdBQiekwUWQEVo37qU4ao7wcaxW1qq42zDDeJMS09w/1533347622/sites/default/files/inline-images/7777.jpg)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் நேற்று கடலூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதிமுக பொது கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். திமுக தலைவர் கலைஞர் மற்றும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை விமசித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சி.வி.சண்முகம் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடைபெற்றது.
கடலூர் நகர செயலாளர் கே.எஸ்.ராஜா தலைமையில் தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி முன்னிலையில் கடலூர் பாரதி சாலையில் சி.வி.சண்முகம் கொடும்பாவி எரித்த திமுகவினர் கண்டன முழுக்கங்கள் எழுப்பினர்.