Skip to main content

தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

 


காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

 

c

 

இக்கூட்டத்தில், ஆகஸ்ட் மாதம் கர்நாடகா திறக்க வேண்டிய காவிரி நீர் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

கூட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நவீன்குமார், கர்நாடக அணைகளில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு நீர் வரத்து குறைவாக இருந்தாலும், தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

சார்ந்த செய்திகள்