Skip to main content

கரோனா வைரஸ் தொற்று பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட 16 பேர் புழல் சிறைக்கு மாற்றம்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

 

சேலத்தில், கரோனா வைரஸை பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட இந்தோனேசிய மத போதகர்கள் உள்பட 16 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆத்தூர் கிளைச்சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

கரோனா வைரஸ் பரவல் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியபோதே, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, ஆரம்பத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றுக்குப் பல நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
 

இந்நிலையில், மார்ச் 11ம் தேதியன்று, இந்தோனேசியா நாட்டில் இருந்து சேலம் வந்த 11 பேர் கொண்ட மத போதகர்கள் குழு மற்றும் சென்னையைச் சேர்ந்த அவர்களுடைய வழிகாட்டி ஒருவர் என 12 பேரை சுகாதாரத்துறையினர் பிடித்து பரிசோதனை செய்தனர். அவர்களில் ஐந்து பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 

coronavirus indonesia 16 persons chennai puzhal prison


ஆனால், அதன்பிறகுதான் சேலம் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு பெரும் தலைவலியே காத்திருந்தது. இந்தோனேசிய மத போதகர்கள் சென்று வந்த மசூதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தனிமைப்படுத்திய சுகாதாரத்துறையினர், 25,000- க்கும் மேற்பட்டோரிடம் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, டெல்லியில் நடந்த தப்லீக் முஸ்லிம் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. ஏப்ரல் 16-ம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் 22 பேருக்கு இந்நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
 

http://onelink.to/nknapp


இந்நிலையில்தான், சேலத்தில் கரோனா வைரஸ் பவரலுக்கு காரணமாக இருந்ததாக இந்தோனேசிய மத போதகர்கள் 11 பேர் உள்பட மொத்தம் 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சையில் இருந்த இந்தோனேசியர்களும், உடன் வந்த வழிகாட்டியும் நோயிலிருந்து மீண்டனர். இதையடுத்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

வைரஸ் பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 16 பேரும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆத்தூரில் இருந்து சென்னை புழல் மத்தியச் சிறைக்கு வியாழக்கிழமை (ஏப். 16) கொண்டு செல்லப்பட்டு, அடைக்கப்பட்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

மண்ணுக்குள் கள்ளச்சாராயம்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.