Skip to main content

தமிழகத்தில் இன்று 646 பேருக்கு 'கரோனா'... ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு!!!

Published on 26/05/2020 | Edited on 26/05/2020
 'Corona' for 646 persons in Tamil Nadu

 

தமிழகத்தில் இன்று மேலும் 646 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 509 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் 17,778 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னையில் ஒரேநாளில் 509 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தொட உள்ளது. அதேபோல் தமிழகத்தில் கரோனாவால் இன்று மேலும் 9 பேர் உயிரிழந்ததால், தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 127 அதிகரித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 611 பேர் சிகிச்சையிலிருந்து குணம் பெற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 646 பேரில் 54 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்