Skip to main content

ஊரை விட்டு வெளியே செல்ல பரிசல் பயணம்: அவதியில் கிராம மக்கள்!

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
ஊரை விட்டு வெளியே செல்ல பரிசல் பயணம்:
அவதியில் கிராம மக்கள்!



கிருஷ்ணகிரி மாவட்டம், சூலகிரி அடுத்த போகிபுரம் என்ற கிராமத்து மக்களின் நிலையை, எந்த அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை  குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் இப்படி பரிசலில் பயணம் செய்து தான் ஊருக்கு வெளியே செல்ல வேண்டி இருக்கிறது.

கடந்த 15 வருடங்கலாக இந்த அணையில் நீர் இல்லாத காரணத்தினால் சென்று வர பாதை பிரச்சனை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது திடீரென அணை நிரம்பி வடிவதால் பள்ளி மாணவர்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் பள்ளி செல்லவும், வேலைக்கு செல்பவர்கள் ஊருக்கு வெளியில் செல்வதற்கும் பரிசலில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே இதனை நேரில் கண்டு அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த ஊர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

- வடிவேல்

சார்ந்த செய்திகள்