Skip to main content

தனியாக மேஜை, நாற்காலி போட்ட காங். நிர்வாகிகள்: திமுக உறுப்பினர்கள் அதிர்ச்சி

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
DMK shock


தேர்தலை எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்வதற்கு வசதியாக அதிமுக, திமுக, அ.ம.மு.க. கட்சிகள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளிலும், வாக்காளர் பட்டியலில் தங்களது கட்சி வாக்குகளை சரிபார்ப்பதிலும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதிலும் சுறுசுறுப்பு காட்டி வருகின்றன. 
 


அந்தப் பட்டியலில் காங்கிரசும் தற்போது இணைந்துள்ளது. 23.09.2018  காலை 6.30. மணி முதல் சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன், காங்கிரஸ் நிர்வாகிகளோடு நடைபயிற்சி மேற்கொண்டார்.
 

சிவஞானம் பூங்காவில் தொடங்கி 54வது வட்டம் முழுவதும் நடந்தபடியே அங்குள்ள மக்களையும், கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் மறைந்த ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் மஸ்தான் உள்ளிட்ட தொண்டர்களின் இல்லங்களுக்கும் சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்தார்.


வாக்காளர்கள் 15000க்கும் மேற்பட்டவர்களை நீக்கம் செய்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவல்கள் சிவராஜசேகரனுக்கு அதிர்ச்சியளித்தது. 
 

அதைத் தொடர்ந்து வாக்காளர் பெயர் திருத்தம், சேர்த்தல் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் காங்கிரஸ் சார்பிலும் பங்கேற்றனர். பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணியிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் தனியாக மேஜை நாற்காலி, டேபிள் போட்டு ஈடுபட்டனர். 

 

DMK shock


இதனை கவனித்த திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகிவிட்டதா? அவர்கள் ஏன் தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டும்? என குழம்பிப்போனார்கள். 
 

உடனே அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம், "திமுக கூட்டணியில் நீங்கள் இல்லையா?" என திமுகவினர் கேள்வி கேட்டு விட்டு நகர்ந்துவிட்டனர். 
 

உடனே மாவட்ட தலைவர் சிவராஜசேகரனை தொடர்புகொண்டு திமுகவினரின் சந்தேகத்தை தெரிவிக்க, "அப்படியெல்லாம் இல்லை. திமுகவினரோடு இணைந்து பணிகளை மேற்கொள்ளுங்கள்" என காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். 


இதனையடுத்து துறைமுகம் பகுதியில் திமுகவினருடன் இணைந்து பூத் கமிட்டி பணிகளில் ஈடுபட்டனர் காங்கிரஸ் நிர்வாகிகள். திமுக நிர்வாகிகளும் இப்பணியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தோழமையோடு கலந்துரையாடினர். பூத் கமிட்டி அமைத்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்தலில் காங்கிரஸார் ஈடுபட்டிருப்பது கதர் சட்டையினருக்கு உற்சாகத்தை தந்துள்ளது என்கிறது சத்தியமூர்த்திபவன்.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.