Published on 10/11/2020 | Edited on 10/11/2020
பாஜக ஆட்சியில் தலித் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக சென்னை சேப்பாக்கத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். மேலும் காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் சிறப்பு விருந்தினராக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர், இந்திராகாந்தி போன்று வேடமணிந்து இருவர் இருந்தனர்.