Skip to main content

நாகையில் டி.டி.வி தினகரன், ஒ.எஸ்.மணியன் அணியினருக்கு இடையே கொடிமரவிவகாரத்தில் மோதல்!!

Published on 25/09/2018 | Edited on 25/09/2018

 

நாகையில் டி.டி.வி, தினகரன் கொடியேற்ற இருந்த ராட்சத கொடிமரத்தை, அகற்ற வேண்டுமென ஒ.எஸ்.மணியனின் ஆதரவாளர்கள் போட்டிக்கு அருகிலேயே கொடிகம்பம் கட்டமுயன்றதால் பெரும் பதட்டமாகியுள்ளது.

 

 

மூன்றாவது கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தினை நேற்று திங்கள் கிழமை வேளாங்கண்ணியில் துவங்கினார் டி.டி.வி தினகரன்.  இரண்டாவது நாள் பயணத்தை இன்று  நாகை பேருந்துநிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் துவங்கினார். அவரது வருகையை முன்னிட்டு நாகை புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு லட்சம் மதிப்பீட்டில் பட்டன் மூலம் கொடியேற்றும் மிகப்பெரிய ராட்சத கொடிமரத்தை 52 அடியில் அக்கட்சியினர் கட்டினர். 

 

 

முறையான அனுமதியில்லாமல் கொடிமேடையை கட்டப்பட்டதாக கூறி கொடிக்கம்பத்தை நகராட்சி நிர்வாகம், போலீசார் உதவியுடன் அப்புறப்படுத்தினர். கொடிகம்பம் அகற்றப்பட்ட நிலையில் காங்கிரட்டால் கட்டப்பட்ட பிரமாண்ட கொடி கட்டையை அகற்ற வேண்டும் என அமைச்சர் ஒ.எஸ்.மணியனின் ஆதரவு அதிமுகவினர் அந்த பகுதியில் திரண்டு போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ஆனால் டி.டி.வி ஆதரவாளர்கள் அந்தகட்டையை அகற்றவிடமாட்டோம் என பிடிவாதமாக இருந்தனர். அதிமுகவினரோ விடாபிடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு  ஜேசிபி இயந்திரத்தை கொண்டுவந்து அருகாமையிலேயே  நாங்களும் கொடிமரம் கட்டப்போகிறோம் என பள்ளம் தோண்டி செங்கல், சிமென்டை கொண்டு போட்டிக்கு கொண்டுவந்து கொட்டி கொடி கட்டை கட்ட முயன்றனர். இருதரப்பு விவகாரத்தால் பரபரப்பு கூடியது. 

 

 

பரபரப்புக்கு இடையில் நகராட்சி அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியோடு ஜேசிபி மூலம் டி.டி.வி அணியினரால் கட்டப்பட்ட கொடிக்கட்டையை இடித்து தரைமட்டமாக்கினார்.  அதன் பின்னர் அதிமுகவினரும் தாங்கள் கொண்டுவந்த கொடிமரம் கட்டும் பணியை நிறுத்திக்கொண்டனர். 

 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு  மட்டுமில்லாமல், தொடர்ந்து இரண்டு கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.