Skip to main content

தாம்பரத்தில் நடு சாலையில் கல்லூரி பேருந்து எரிந்து விபத்து!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022

 

College bus catches fire on Tambaram Nadu road

 

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து எண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது கோவூர் என்ற இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. எபினேஷ் என்பவர் வாகனத்தை இயங்கி வந்த நிலையில் அந்த பேருந்தில் மொத்தம் 35 மாணவர்கள் பயணித்ததாக சொல்லப்படுகிறது. அப்பொழுது பேருந்து தீப்பிடித்ததை தொடர்ந்து ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு  மாணவர்களை கீழே  இறங்க வைத்துள்ளார். இந்த விபத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிப்பதற்குள் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு கரும்புகை சூழ்ந்ததால் பதற்றம் நிலவியதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அதே கந்தர்வக்கோட்டை சம்பவம்; அச்சத்தில் தாம்பரம்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
The same Kandaravakot incident; Tambaram in fear

சென்னையை அடுத்துள்ள தாம்பரத்தில் நேற்று வழக்கறிஞர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த மீனாம்பாள் தெருவில் தியாகராஜர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞர் ஆவார். நேற்று வழக்கம்போல் வழக்கறிஞர் தனது மனைவி, மகனுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்பொழுது திடீரென வீட்டுக்குள் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அப்போது ஜன்னல் வழியாக வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் அந்த பகுதியில் இருந்து ஓடிச் சென்றது தெரிந்தது.

வீட்டிற்குள் துப்பாக்கி குண்டு ஒன்று விழுந்து கிடந்தது. அந்த குண்டை பார்த்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றிருக்கலாம் என அச்சமடைந்து உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், வீட்டுக்குள் ஜன்னலை துளைத்து உள்ளே வந்த துப்பாக்கி குண்டை கைப்பற்றி ஆய்வு செய்தனர். ஆய்வில் அது எஸ்.எல்.ஆர் சிறிய ரக துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு எனத் தெரியவந்தது.

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் அருகிலேயே ஒரு துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் இருப்பதாகவும் அங்கிருந்து தோட்டாக்கள் பறந்து வந்திருக்கலாம் என்ற கோணத்தில் இப்பொழுது விசாரணையை போலீசார் மாற்றி உள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள இடங்களை ஆய்வு செய்ததில் ஏழு இடங்களில் இதேபோல சிறிய துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அண்மையில் விமானப்படை பயிற்சிக்காக வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அச்சத்திற்கு உள்ளாகியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நார்த்தாமலை பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் இருந்து பாய்ந்த குண்டு, வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனின் மூளையை துளைத்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.