Skip to main content

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரி தின விழா! 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

College of Agriculture Day at Annamalai University!

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கழகம் சார்பில் வேளாண் கல்லூரி தின நடைபெற்றது. வேளாண் கழக துணை தலைவர் இமயவரம்பன் வரவேற்புரை வழங்கினார். வேளாண்புல முதல்வர் சுந்தரவரதராஜன்  தலைமை தாங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் விழாவைத் துவக்கி வைத்து பேசுகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தின் பங்களிப்பை மாநில மற்றும் தேசிய அளவில் விளக்கிக் கூறினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி  சிறப்புரையாற்றி பேசுகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முக்கிய துறைகளில் இணைந்து பணிபுரிய வேண்டிய தேவை உள்ளது என்பதை விளக்கிப் பேசினார். இவ்விழாவின் ஒரு பகுதியாக இயற்கை வேளாண்மை மற்றும் வளங்குன்றா வேளாண் மைய அடிக்கல் திறப்பு விழாவும் நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர். சீதாராமன் வாழ்த்துரை வழங்கினார்.

 

தமிழ்நாடு வேளாண் புதுமை விருது பெற்ற இளநிலை வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் பிரேம்குமார், பிரேமதர்ஷினி ஆகியோர் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர். பின்னர் கல்லூரி விழாவில், கலை, விளையாட்டு மற்றும் கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. துணைவேந்தரின் நேர்முக செயலர் பாக்கியராஜ் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி இரத்தின சம்பத்  ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக வேளாண் கழக பொருளாளர் இலங்கை மன்னன் நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.