Skip to main content

வீடு தேடிப்போய் வேலைக்கான ஆர்டரை வழங்கிய கலெக்டர்!! நெகிழ்ந்து கண்ணீர் விட்ட ஏழை மாணவி!!

Published on 27/09/2018 | Edited on 27/09/2018

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தி. தாய், தந்தை இருவரும் கிடையாது. இவர் தனக்கு கீழ்வுள்ள இரண்டு சகோதரன் - சகோதரியை வளர்க்கும் பொறுப்பு இவருடையதானது. இதனால் தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு செல்லத்துவங்கினார். 

 

POOR GIRL

 

இந்நிலையில், சத்துணவு சமையலராக இருந்து பணியின் போது மறைந்த தனது தாயின் வேலையை கருணை அடிப்படையில் தனக்கு வழங்க வேண்டும் எனக்கேட்டு சத்துணவு அதிகாரிகளை சந்தித்தார். அவர்களோ உனக்கு 21 வயதானால் தான் வேலைக்கு மனு செய்ய முடியும் என துரத்தியடித்தனர். இதனால் மனம் நொந்துப்போய் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 13.08.2018 தேதி அன்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்திற்காக அலுவலகத்திற்க்கு வந்து மனு தர வரிசையில் காத்திருந்தார்.

 

 

அலுவலகத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் வழியில் நின்றுயிருந்த இவர்களை பார்த்துவிட்டு என்னவென விசாரித்தார். அதன்பின் நடந்தவற்றை செய்தியாளர்களிடம் பகிர்ந்துக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அலுவலகத்துக்குள் நுழையும் போது செல்வி.வெ.ஆனந்தி கண்ணீர் நிறைந்த கண்களுடன் வராண்டாவில் என்னை சந்திக்க காத்து கொண்டிருந்தார். அவரை அருகில் அழைத்து எதற்காக இங்கு வந்தாய் என கேட்ட போது, தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. இல்லையெனில் நாங்கள் அனைவரும் இறப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியதை கேட்டவுடன் அவரிடம் உனது குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறேன் என ஆறுதல் தெரிவித்து எனது அறைக்கு அழைத்து சென்று அமர வைத்து உன் குறையை சொல் என்று கேட்ட பிறகு இந்த 19 வயது பெண்ணின் நிலையை கேட்பதற்கு கூட வலிமையான இதயம் வேண்டும் என்பதை பின்னர் உணர்ந்தேன்.

 

poor girl

 

எனக்கு தாய், தந்தை இருந்தார்கள், தற்போது இருவரும் உயிருடன் இல்லை.  எனது உடன்பிறந்த இளைய சகோதரி மற்றும் இளைய சகோதரர், வயதான பாட்டி மட்டும் உடன் இருக்கிறார்கள். என்னுடைய தாய் அனிதா, கனிகிலுப்பை அரசு ஆரம்ப பள்ளி சத்துணவு  மையத்தில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வந்தார். எனது தந்தை வெங்கடேசன் உடல்நிலை மிகவும் சரியில்லாததால் அவரால் வேலைக்கு செல்ல இயலாத நிலையில், எனது தாயின் வருமானத்தில் மட்டுமே எனது குடும்பம் நடந்து வந்தது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் +2 படிக்கும் போது எனது அம்மா திடீரென இறந்துவிட்டார். எனது அம்மா பணியில் இருக்கும் போது இறந்ததால் கிடைக்கப்பெற்ற இறப்புகால பணப்பயன் தொகையினை உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த எனது தந்தையின் மருத்துவ செலவிற்காக பயன்படுத்தி அவரை காப்பாற்றி வந்தோம். அதன் பிறகு நான், எனது வயதான பாட்டியுடன் விவசாய கூலி வேலைக்கு சென்று உடல்நிலை சரியில்லாத தந்தை, தங்கை மற்றும் தம்பி ஆகியோரை காபாற்றி வந்தேன். ஓராண்டுக்கு முன் 2017-ல் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த எனது தந்தையும் இறந்து விட்டார். தற்போது எனது பாட்டியும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் நான் மட்டுமே விவசாய கூலி வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு எனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன் எனவும், என்னாலும் இப்படிப்பட்ட கடுமையான உடலுழைப்பு வேலைகளை செய்ய முடியவில்லை எனத் தெரிவித்தார். 

 

poor girl

 

எனது அம்மா பணியில் இருக்கும் போது இறந்ததால் கருணை அடிப்படையில் பணி அளிக்க கோரி மனு அளித்தும், 21 வயதினை நிறைவு செய்த பின்னர் தான் வேலைக்கு தகுதி எனத் தெரிவித்து வேலையும் கொடுக்கவில்லை. எனக்கு 21 வயதாக இன்னும் 2 ஆண்டுகள் உள்ளதால், வேலை கிடைக்கும் வரை 2 ஆண்டுகளும் தொடர்ந்து இந்த வறுமை நிலைக்கு தள்ளப்பட்டால், நாங்கள் உயிருடன் வாழ்வதற்கு வழியில்லை. நான் கூலி வேலை செய்து கிடைக்கும் சொற்ப வருமானம் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கே பத்தாத நிலையில், நானும் எனது தங்கையும் +2 படித்தாலும் கல்லூரியில் சென்று படிக்க இயலவில்லை. எனது தம்பி மட்டும் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் என்ற விவரங்களை தெரிவித்தார்.

 

 

இந்த பெண் தனது சூழ்நிலையினை விளக்கியவுடன் அதிகாரிகளை அழைத்து விவரம் கேட்ட போது, இவருக்கு உடனடியாக கருணை அடிப்படையில் வேலை கொடுக்க வேண்டுமென்றால், அதற்கு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்தார்கள். இந்த பெண்னிற்கு உடனடியாக வேலை கிடைக்காமல் இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் வேலை தரும்போது அந்த வேலையை செய்ய அவர்கள் உயிருடன் இருக்கவேண்டும்மே எனச்சொல்லி இதுப்பற்றி சமூக நலத்துறை செயலருடன் தொடர்பு கொண்டு இந்த சூழ்நிலையினை விளக்கி இதனை மிகவும் சிறப்பினமாக கருதி அவரின் கல்வித் தகுதி அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்ய அனுமதி அளிக்குமாறு கோரியதுடன் அதற்காக முன்மொழிவினையும் அனுப்பி வைக்கப்பட்டது. அன்றே அப்பெண்னிற்கு இரண்டு மாதம் வரை குடும்ப செலவிற்காக தேவைப்படும் தொகையும் கொடுத்து, அரசு வேலை கிடைக்கும் வரை கூலி வேலைக்கு செல்ல வேண்டாம் இத்தொகையினை கொண்டு எவரையும் எதிர்பார்க்காமல் குடும்பத்தினை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தி, நல்ல எதிர் காலம் உனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையினை தெரிவித்து அனுப்பி வைத்தேன்.

 

 

இந்நிலையில், உடல்நிலை நலிவுற்றிருந்த அவரது பாட்டியும் 24.08.2018 இறந்து விட்டார். இதன் பிறகு, பெற்றோரோ அல்லது பெரியவர்களோ யாரும் இல்லாத இந்த சூழ்நிலை பற்றிய தகவல் வந்தது. உடனே அவர்களை அழைத்து ஆறுதல் கூறினேன். அதோடு ஆனந்தியின் சகோதரி அமுதாவை அலுவலகத்துக்கு நேரில் வரவைத்து உனக்கு நிரந்தரமான வாழ்க்கை வேண்டுமென்றால் கல்லூரி கல்வியினை கட்டாயம் தொடர வேண்டும் என அறிவுறுத்தி, ஒரு தனியார் கல்லூரியில் 3 ஆண்டுகளுக்கும் எந்தவித கட்டணமும் இல்லாமல் பி.எஸ்.சி பயோ கெமிஸ்ட்ரி படிப்பில் சேர்த்துவிட்டோம், இப்போது கல்லூரியில் படித்து வருகிறார்.  அதேபோல், ஆனந்திக்கும் அண்ணாமலை பல்கலை கழக தொலை தூரக் கல்வியில் 3 ஆண்டு செலுத்த வேண்டிய கட்டணத் தொகை அளிக்கப்பட்டு பி.ஏ. தமிழ் இளங்கலை பட்டப்படிப்பு சேர்த்து தற்போது படித்து வருகிறார்.

 

poor girl

 

இந்நிலையில் சிறப்பினமாக பெறப்பட்ட அரசாணை அடிப்படையில் இவரை கருணை அடிப்படையில் சமையல் உதவியாளர் பதவிக்கு பதிலாக கல்வித் தகுதியின் அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் ஆக ஆரணி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கனிகிலுப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணி நியமன ஆணை அரசு வழங்கியது. அதனை 26.09.2018 வழங்கி, இத்தேதியில் பணியில் சேர்ந்தார். தனது விடாமுயற்சியில் வெற்றி பெற முடியும் என்று எனக்கு பாடம் உணர்த்திய 19 வயது ஆனந்தி நன்றாக வாழ்வார் என்றார். 

 

 

கனிகிலுப்பை அரசு நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி , ஆனந்தி வீட்டிற்கு நேரடியாக சென்று வழங்கினார். அதோடு, மதிய உணவினை ஆனந்தி, அவரது தங்கை மற்றும் தம்பியுடன் சேர்ந்து அவரது வீட்டிலேயெ மதிய உணவு எடுத்துக் கொண்டடார். பின்னர் அவர்களுக்காக வாங்கி சென்றுயிருந்த புதிய மிதிவண்டி மற்றும் பழங்களை வழங்கினார். ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் தற்போது வசித்து வரும் வீடு மிகவும் பழுதடைந்து உள்ளதால், பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் வழங்கி வாழ்த்தினார். 

 

யாரும்மில்லாத அநாதை பிள்ளைகளுக்கு வேலை வாங்கி தந்து, படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்த கலெக்டரை அவ்வூர் மக்கள் கொண்டாடினார்கள். 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story

'இது தான் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் அழகா?'-ராமதாஸ் கண்டனம்

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'This is the beauty that creates job opportunities?'- Ramadoss condemned

'தமிழ்நாடு முழுவதும் 490 பேரூராட்சிகளில் உள்ள 8130 பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இனி ஆள் தேர்வு நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இருக்கும் வேலைவாய்ப்புகளையும் ஒழித்து வருவது கண்டிக்கத்தக்கது' என பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் மொத்தம் 490 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றில் எலக்ட்ரீசியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர், தெருவிளக்கு பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக 8130 பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 7061 பணிகள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், 1069 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முற்றிலும் எதிர் மாறாக மொத்தமுள்ள 8130 பணியிடங்களையும் ரத்து செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, பேரூராட்சிகளில் காலியாக உள்ள 1069 பணியிடங்களும் உடனடியாக ரத்து செய்யப்படும். மீதமுள்ள 7061 பணியிடங்களும் படிப்படியாக காலியாகும் போது அவையும் ரத்து செய்யப்படும். இனி பேரூராட்சிகளில் எலக்ட்ரிஷியன், பிட்டர், அலுவலக காவலர், ஓட்டுநர், பிளம்பர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு  நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்பதுதான் அரசாணை சொல்லும் செய்தியாகும். அதாவது, மேற்குறிப்பிடப்பட்ட பணிகளில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு இனி உள்ளாட்சி அமைப்புகளில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகளை மாற்றுதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டிருப்பது தான் இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு காரணம் ஆகும். தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் பேரூராட்சிகளின் அன்றாடப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்; இதுவரை உள்ளாட்சி அமைப்புகளில் கவுரவமான  ஊதியம் வழங்கப்பட்டு வந்த பணிகள், இனி தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு மிகக்குறைந்த  ஊதியம் மட்டுமே வழங்கப்படும். அதன் காரணமாக கவுரவமான ஊதியத்துடன் கண்ணியமாக வேலை  செய்யும் வாய்ப்பு தமிழ்நாட்டு இளைஞர்களிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. இது சமூக அநீதி ஆகும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இதுவரை மூன்றரை லட்சம் பேருக்காவது  அரசு வேலை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  அதில் 10%  அளவுக்குக் கூட அரசு வேலை வழங்கப்படவில்லை. அதேபோல்,  கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தது 1.20 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்த பட்டிருக்க வேண்டும்.

ஆனால், இவை எதையுமே செய்யாமல் இருக்கும் பணியிடங்களை ஒழிக்கும் வேலையைத் தான் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இது தான் 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் அழகா? என்பதை அரசு விளக்க வேண்டும். ஏற்கனவே, அரசுத்துறைகளில் டி பிரிவு பணியிடங்கள் குத்தகை முறையில் தனியாரைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகின்றன. குத்தகை முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் போது, பணியாளர்களுக்கு கவுரவமான ஊதியம் வழங்கப்படாது; அதைவிட முக்கியமாக பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது. இந்தக் காரணங்களை சுட்டிக் காட்டி குத்தகை முறை பணி நியமனங்களை மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தும் கூட, அரசு மற்றும் உள்ளாட்சி பணியிடங்களை ரத்து செய்து விட்டு, அவற்றை தனியார் மூலம் குத்தகை முறையில் நிரப்புவது சமூகநீதிக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும். சொல்லுக்கு சொல் சமூகநீதி என்று பேசும் திமுக, சமூக நீதிக்கு இப்படி ஒரு கேட்டை செய்யக்கூடாது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்புதல், புதிய பணியிடங்களை ஏற்படுத்துதல் என இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றி இருந்தால், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 4.7 லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைத்திருக்கும். அதனால், அந்தக் குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து இயல்பாகவே மீண்டிருக்கும். அவர்களுக்காக  வறுமை ஒழிப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டியிருக்காது. ஆனால், அதற்கு மாறாக அரசு மற்றும் உள்ளாட்சிப் பணிகளை ஒழித்து தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் பல குடும்பங்களை மீண்டும் வறுமையின் பிடிக்குள் தமிழக அரசு தள்ளிக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மையாகும்.

அரசு பணியிடங்களை ரத்து செய்வது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு வகை செய்யாது. இதை உணர்ந்து 8130 பணியிடங்களை ஒழிக்கும் ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அத்துடன் காலியிடங்களை நிரப்பும் நடவடிக்கைகளையும், 2 லட்சம் புதிய பணியிடங்களை உருவாக்கும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.