Skip to main content

கோயம்பேடு மார்க்கெட்  நாளை வழக்கம் போல் செயல்படும்-வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு 

Published on 24/03/2020 | Edited on 24/03/2020

கரோனா வைரஸ் பரவுதலைத் தடுப்பதற்காக 24-ந்தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

 

The Coimbate market will function as usual tomorrow


இதனால் நேற்று பிற்பகல் முதல் தமிழகத்தின் சென்னை மற்றும் அனைத்து முக்கிய இடங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அதிகப்படியாக சென்றனர். 144 தடை உத்தரவு பற்றிய அறிவிப்பின் பொழுது இந்த உத்தரவு நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.  தற்போது தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் நாளை வழக்கம் போல் செயல்படும் என கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்