முதல்வர் எடப்பாடி வீடு முன் போராட்டம் -
மாணவி நந்தினி கைது!
மாணவி நந்தினி கைது!
சென்னையில் முதல்வர் வீடு முன் உண்ணாவிரத போராட்டம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரியில் ஒகி புயலின் போது கடலில் சிக்கி காணமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி குழித்துறை ரயில் நிலையத்தில் நேற்று 12 மணி நேரத்துக்கும் மேலாக குமரியை சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முதல்வர் பழனிசாமியை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அளித்த வாக்குறுதியை ஏற்று மீனவர்கள் நடத்தி வந்த மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
இந்தநிலையில் புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க கோரிக்கை விடுத்து, சென்னையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு முன் இன்று காலை, உண்ணாவிரதம் போராட்டம் இருக்க முயன்றுள்ளார். இதையடுத்து சட்டக்கல்லூரி மாணவி நந்தினியை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச்சென்றுள்ளனர்.