Skip to main content

சென்னையில் ஐடி ஊழியர்கள் வங்கி கணக்கில் போலிக் கார்டுகள் மூலம் கைவரிசை;உணவக ஊழியர்கள் கைது!!

Published on 08/01/2019 | Edited on 08/01/2019

சென்னையில் ஐடி ஊழியர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை போலியாக தயாரித்து 10 லட்சம் ரூபாய் திருடிய வடமாநில கும்பல் சிக்கியுள்ளது. போலி கார்டுகள் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து விசாரணைக்குப்பின் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

சென்னை பெருங்குடியில் இயங்கி வரும் எஸ்.பி இன்போஸிட்டி எனும் ஐடி வளாகத்தில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

 

ATM

 

அங்கு பணிபுரிபவர்கள் பலரின் வங்கி இருப்பு பணம் பீகார், பாட்னா கொல்கத்தா போன்ற இடங்களில் இருந்து திருடப்பட்டது. 20 நாட்களுக்குள் சுமார் பத்து லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது. இதுதொடர்பான புகாரில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்பி  இன்போஸிட்டி ஐடி வளாகத்தில் உணவகத்தில் வேலை பார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த ஒன்பது இளைஞர்களை கடந்த சனிக்கிழமை கைது செய்தனர்.

 

 ஜூஸ்இட், ஷாபி இ பஞ்சாப் என்கின்ற இந்த இரண்டு கடைகளிலும் வேலைக்கு சேர்ந்து சில மாதங்களே ஆன நிலையில் அவர்கள் இந்த நூதன மோசடி அரங்கேற்றியுள்ளனர். எவ்வாறு இப்படி பணத்தை திருடினர். இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் போன்ற தகவல்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு இணை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,

 

 குறிப்பிட்ட அந்த இரு உணவகத்தில் சாப்பிடக்கூடிய ஊழியர்கள் பணம் செலுத்தும் பொழுது அவர்களுடைய கார்டுகளின் டேட்டாக்களை ஸ்கிம்மர் மூலமாக எடுத்து அதன் மூலமாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை  போலியாக தயாரித்து ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேற்கொண்டு புலன் விசாரணை செய்தபோது இந்த தொழில்நுட்ப அறிவு எங்கிருந்து வந்தது. இதுமாதிரி ஏற்கனவே செய்துள்ளார்களா இந்த கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். கைதானவர்களில் ஒருவரான ராகுல் சிங்தான் அந்த உணவகத்தின் மாஸ்டர். மோசடிக்கு மூளையாக செயல்பட்ட செயல்பட்டவரும் அவர்தான். இந்த உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்த பிறகு பீகாரில் உள்ள தனது கிராமத்தை சேர்ந்த 8 பேரையும் ஒவ்வொருவராக சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இந்த இரண்டு கடைகளிலும் வேலைக்கு சேர்ந்தவர்கள் உணவக உரிமையாளருக்கே  தெரியாமல் ஸ்கிம்மர் கருவி பயன்படுத்தியுள்ளனர். 

 

ATM

 

வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் தரவுகளை திருடி போலி கார்டுகளை தயாரித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த இரு உணவுகத்திலும் சாப்பிட வரும் ஊழியர்களிடம் பணமாக வாங்காமல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் எனக் கூறி வாடிக்கையாளர்களின் கார்டுகளின் தரவுகளை திருடியுள்ளனர். 

 

கருவி பொருத்தப்பட்டு  தேய்க்கப்படும் கார்டின் விவரங்கள் கணினியில் பதிவாகிவிடும். பின்னர் pos கருவியில் கார்டை ஸ்வைப் செய்யும்போது வாடிக்கையாளர்களின்  ரகசிய குறியீட்டு எண்ணை குறித்துக் கொள்வார்கள். கூடுதலாக கையில் அணிந்துள்ள ரகசிய கேமரா மூலமாக ரகசிய எண் வீடியோவாகவும் பதிவு ஆகிவிடும். பின்னர் இப்படிப்பட்ட திருடிய விவரங்களை கொல்கத்தாவில் உள்ள முக்கிய குற்றவாளிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இப்படி குறுகியகால இடைவெளியில் பெரும் தொகையை சுருட்டி உள்ளனர். சந்தேகம் வராமல் இருக்க தரவுகளை திருடிய 3 நாட்களுக்கு பிறகே போலி கார்டுகள் மூலம் பணத்தை திருடியுள்ளனர்.

 

 

எனவே பொதுமக்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும்பொழுது எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாமக்கல் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
CM MK Stalin fulfilled the demand of the people of Namakkal 

நாமக்கல் மாவட்டம் கடந்த 1997 ஆம் ஆண்டு 2 வருவாய் கோட்டங்கள், 8 வட்டங்கள், 30 வருவாய் பிர்க்காக்களுடன் (Firka) உருவாக்கப்பட்டது. கடந்த 2011 ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகையின் எண்ணிக்கை 17 லட்சத்து 26 ஆயிரத்து 601 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 169 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட பிற செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சங்கங்களையும் சேர்த்து மொத்தம் 816 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில், நாமக்கல் மாவட்டம், கோழிப்பண்ணை, லாரி பாடி பில்டிங், முட்டை உற்பத்தி, ஆமணக்கு எண்ணெய் பதப்படுத்தும் தொழில் ஆகிய பல முக்கிய தொழில்களுக்கு பெயர் பெற்றதாகும். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்டத்தில் 45 கிளைகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 29 கிளைகள் என மொத்தம் 74 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 98.70 கோடி ரூபாய் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 55.15 கோடி ரூபாய் பங்குத்தொகையுடன் இவ்வங்கி செயல்பட்டு வருகிறது. மேலும், 2020-21 ஆம் ஆண்டில் 22.17 கோடி ரூபாய், 2021-22 ஆம் ஆண்டில் 20.37 கோடி ரூபாய் மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 18.24 கோடி ரூபாய் என தொடர்ந்து லாபம் ஈட்டியுள்ளது.

இத்தகைய சூழலில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டதிற்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதனைப் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் பயன்பெறும் வகையிலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட முதலமைச்சர் ஆணையிட்டார். இந்நிலையில் இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி இன்று (6.3.2024) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

வங்கியில் நூதன மோசடி; போலீஸ் தீவிர விசாரணை

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Bank scam in Trichy

திருச்சி ரேஸ் கோர்ஸ் ரோடு தாமஸ் தெரு பகுதியில் தனியார் இன்ஜினியரிங் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் இயக்குநர்களாக திருநாவுக்கரசு, பாஸ்கரன், சிவக்குமார், ஸ்ரீனிவாசன், அர்ச்சனா ஆகியோர் உள்ளனர். இந்த நிறுவனத்தின் காசோலை மற்றும் கணக்கு வழக்குகளில் கையெழுத்திடும் அதிகாரம் திருநாவுக்கரசு மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கிக் கணக்குகளை சரிபார்த்தபோது காசோலை கொடுக்காமல் ரூ.18,28,452 லட்சம் வேறு 2 கம்பெனி கணக்குகளில் வரவு ஆகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவன பொது மேலாளர் ஜெகநாதன் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி மேலாளருக்குத் தகவல் தெரிவித்தார்.

பின்னர் நேரடியாகச் சென்று ஒப்புகைச் சீட்டு கேட்டபோது வங்கி மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகிய இருவரும் செல்போன் வாயிலாக மேற்கண்ட நிறுவனத்தின் டைரக்டர் ஸ்ரீனிவாசன் பேசுகிறேன் எங்களது வங்கிக் கணக்கிலிருந்து கீழ்க்கண்ட இரு வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 8,96,934 மற்றும் ரூ.9,31,518 ஆகிய தொகையை ஆர்.டி.ஜி.எஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஆர்டிஜிஎஸ் செய்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மர்ம நபர் ஒருவர் மேற்கண்ட நிறுவனத்தின் டைரக்டர் பெயரைச் சொல்லி நூதன மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜெகநாதன், திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.