Published on 03/04/2019 | Edited on 03/04/2019
கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம், தேனியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் 2018 அக்டோபரில் சுந்தர்ராஜ், ரவி, குமரேசன் ஆகிய மூவருக்கும் தூக்குதண்டனை விதித்தது. தற்போது இந்த தூக்குதண்டனையை ரத்துசெய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களை உடனே விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை பொறுத்தவரையில் அரசு தரப்பு விசாரணையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. பல முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது, முக்கிய சாட்சிகள் பலர் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.