Skip to main content

மத்திய அமைச்சரே இப்படி செய்யலாமா? நிர்மலா சீத்தாராமன் செயல்பாட்டால் கோபமடைந்த அதிகாரிகள்

Published on 24/08/2018 | Edited on 24/08/2018
n

 

கேரளாவைப் போலவே கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறது.   மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும் கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ சபை உறுப்பினரான நிர்மலா சீதாராமன்   வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்ய நேற்று மைசூர் வந்திருந்தார். 


இந்த நிலையில் இன்று காலை மைசூரிலிருந்து ஷராஞ்சி ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் வந்தடைந்தார். அதன் பின்னர் சாலை வழியாக வெள்ள பாதிப்பு அடைந்த பகுதிகள், மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில், நிவாரண முகாம்களை நேரடியாக பார்வையிட்டார். அதன் பின்னர் பயணத் திட்டத்தின் படி துணை ஆணையர் அலுவலகத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்தான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பேசுவது தொடர்பான நிகழ்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிவாரணம் முகாமுக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சந்திப்பு என பயணத் திட்டத்தில் இல்லாத இடங்களுக்கு மத்திய அமைச்சர் சென்றிருக்கிறார். நேரடியாக அங்கு சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் அதிகாரிகள் காத்துக் கொண்டிருப்பதாகவும் அங்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். 

 

n

 

அப்போது கோபமடைந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில அமைச்சர் சொல்வதை நான் கேட்க வேண்டுமா? அதிகாரிகளிடம் பேசிவிட்டு நீங்கள் உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மாநில அமைச்சர் கூறியிருக்கிறார். அதன் பின்னர் அதிகாரிகள் இருக்கும் இடத்திற்கு வந்த நிர்மலா சீதாராமன் எந்த அளவிற்கு அதிகாரிகள் முக்கியமோ அந்த அளவிற்கு பரிவாரும்(ராணுவ பரிவாரா அல்ல ஆர் எஸ்எஸ் பரிவாரா என்று தெரியவில்லை) எனக்கு முக்கியம் என அருகிலிருந்த அமைச்சரிடம் கோபத்துடன் கூறினார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஒரு மாநில அமைச்சரின் உத்தரவுகளை பின்பற்றுகிறார் என்பதை நம்ப முடியவில்லை என்றார் . அதன் பின்னர் அருகிலிருந்த குடகு துணை ஆணையர் ஶ்ரீவித்யாவை  நோக்கி உங்களுக்கும் அமைச்சருக்கும் வெவ்வேறு விதமான கருத்துக்கள் இருந்தால் அதை நீங்கள் பேசிக் கொள்ளுங்கள். என்னை இக்கட்டான சூழலில் தள்ளாதீர்கள். பயணத் திட்டத்தின் படி நான் சென்று கொண்டிருக்கிறேன். 

 

nir

 

இத்தனை விஷயங்கள் நடந்த பின்னர்தான் எதிரிலிருந்த  மீடியாக்கள் சத்தமாக பேசும்படி சொல்லியிருக்கிறார்கள். அனைத்தையும் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறியபின்னர், வெள்ள நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் விவாதித்திருக்கிறார். அதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் ஏழு கோடி ரூபாயும் பாராளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயும் வழங்குவதாக அறிவித்தார்.

 

வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய வந்த இடத்தில் அதிகாரிகளை காக்க வைத்துவிட்டு அதன் பின்னர் அமைச்சர் அழைத்ததும் பயணத் திட்டத்தின் படி நான் நடப்பதாகவும் கோபத்துடன் கூறியிருக்கிறார் அங்கிருந்த அதிகாரிகளும் மற்றும் மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த பாஜகவினர் சிலரே மத்திய அமைச்சரின் இந்த நடவடிக்கையால் வேதனை அடைந்துள்ளனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அப்பன்' என்பது கெட்ட வார்த்தையா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி  

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
Is 'appan' a bad word?-Interview with Minister Udayanidhi Stalin

‘அப்பன்’ என்பது கெட்ட வார்த்தையா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வினவியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ''மழைக்கு முன் 92 சதவீதம் வடிகால் பணி முடிந்தது என்று கூறினார்கள். மழைக்குப் பின் 45 சதவீதம் பணிகளே நிறைவு என மாற்றி பேசினார்கள். 4000 கோடி என்னவானது? 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் மாநில அரசு கற்றுக் கொண்ட பாடம் என்ன?'' தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிக்க முடியாது. இதுவரை எந்த மாநிலத்திலும் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்ததில்லை. அதற்கான வழக்கம் இல்லை'' என பேசியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நான் அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறேன். மக்கள் வரிப்பணத்தைத்தானே கேட்கிறேன் என  பேசியதை தப்புன்னு சொல்றாங்களா. நான் வேணும்னா இப்படி சொல்லட்டுமா. மாண்புமிகு மத்திய அமைச்சரோட மரியாதைக்குரிய அப்பா சொத்தை நாங்க கேட்கல. தமிழக மக்கள் கட்டும் வரிப் பணத்தை தான் கேட்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜனும் உதயநிதியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். 

 

Is 'appan' a bad word?-Interview with Minister Udayanidhi Stalin

இந்நிலையில், சென்னையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ''நான் ஏதாவது கெட்ட வார்த்தை சொன்னேனா? மரியாதைக்குரிய நிதியமைச்சரிடம் மீண்டும் மரியாதையாக நான் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய சொந்த விஷயத்திற்காக கேட்கவில்லை. தமிழ்நாடு மக்கள் கடும் பேரிடரில் உள்ளனர். பேரிடர் என்றும் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறார்கள். சோசியல் மீடியாவில் கூட ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார். 10 வருட பாஜக ஆட்சியே கடும் பேரிடர் என்பதால் இதனை தனியாக பேரிடர் என்று பார்க்க மாட்டோம் என்று சொல்கிறோம் என பதிவிட்டிருந்தார். அதுபோல் தயவுசெய்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்காதீர்கள். எதை வைத்து அவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

மத்திய குழுவை அமைத்தார்கள். அவர்கள் எல்லாருமே இங்கு வந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று சொல்லிவிட்டு சென்றார்கள். ஆனால் நிதியமைச்சர் இதனை முழுவதுமாக அரசியல் ஆக்க முயற்சிக்கிறார். நான் யாரையும் மரியாதைக் குறைவாக பேசியதில்லை. தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக சென்னை மக்கள், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்கள், தென் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியவில்லை. நேற்று மாலை வரை ஏரல் பகுதியில் இருந்தேன். நேற்று முன்தினம் காயல்பட்டினம் சென்று இருந்தேன். இன்னும் பாதிப்பில் இருந்து முழுமையாக வெளியே வரவில்லை. எனவே மீண்டும் நிவாரண தொகையை கொடுங்கள் என மரியாதையாக கேட்கிறேன். நான் என்ன அநாகரிகமாக பேசி விட்டேன். 'அப்பன்' என்பது கெட்ட வார்த்தையா? தெரியாமல் தான் கேட்கிறேன்.  மரியாதைக்குரிய ஒன்றிய நிதியமைச்சர் உடைய மரியாதைக்குரிய அப்பா, வணக்கத்திற்குரிய அப்பா, மாண்புமிகு அப்பா எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்'' என்றார்.

Next Story

நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
 Annamalai meeting with Nirmala Sitharaman

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கான தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார். நேற்று திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு வெளியாகி இருந்த நிலையில், இந்த சந்திப்பில் அது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் யூகங்கள் கிளம்பியுள்ளன.

இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.