Skip to main content

பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி போடும் நிபந்தனை! 

Published on 28/12/2018 | Edited on 28/12/2018
eps - modi




நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில், கூட்டணி அமைக்கும் முயற்சியில் மாநில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது பாஜக தலைமை. இதற்காக 17 மாநிலங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை சமீபத்தில் நியமித்திருக்கிறார் அமீத்ஷா. 

 

இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்கிற திட்டத்துடன் காய்களை நகர்த்தி வரும் பாஜக தலைமை, ' தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும்; நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் பாஜகவுக்கு சீட் ஒதுக்கப்பட்டு கூட்டணி அமைக்கப்பட வேண்டும்' என்கிற அழுத்தத்தை எடப்பாடிக்கு கொடுத்து வந்தது. 

 

இந்த நிலையில்தான், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரிடமும் சில முக்கிய தகவல்களைச் சொல்லி டெல்லிக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி. 



டெல்லி சென்ற அவர்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினர். அதிமுகவுடனான அரசியல் விவகாரங்களை நிர்மலா கவனிப்பதால்,  அரசியல் ரீதியிலான விவாதங்களை அவரிடம்தான் ஆலோசிக்கிறது எடப்பாடி தலைமையிலான அதிமுக! 

 

அந்த வகையில்தான், நிர்மலாவை சந்தித்து விவாதிக்க அமைச்சர்கள் இருவரையும் அனுப்பி வைத்தார் எடப்பாடி. மத்திய அமைச்சருடனான அந்த சந்திப்பில் , தங்களது நிலையை அழுத்தமாக வலியுறுத்தி விட்டு வந்துள்ளனர் அமைச்சர்கள். 


 

P. Thangamani S.P Velumani Nirmala Sitharaman


 

இது குறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது, "தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி தொடர்பான விவகாரங்களை பேசி முடித்துவிட்டு, கூட்டணி குறித்த விசயங்களை அமைச்சர்கள் பேசியிருக்கிறார்கள். அப்போது, தினகரனை கட்சியில் இணைக்கச் சொல்லி வலியுறுத்தாதீர்கள். 

 

இணைப்பிற்கு அதிமுகவின் அனைத்து நிர்வாகிகளிடமும் எதிர்ப்பு இருக்கிறது. தினகரனை இணைத்தால் இன்னொரு அதிகார தலைமை உருவாகுமே தவிர, நீங்கள் நினைக்கும் சூழல் வராது. அதனால், தினகரன் இல்லாமலே நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றியை எங்களால் தரமுடியும். அதனால், தினகரனை சேர்க்கச் சொல்லி வலியுறுத்த வேண்டாம். 

 

பாஜகவுடன்  கூட்டணி வைக்க எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால்,  அதிமுகவில் உள்ள 50 எம்.பி.க்களில் லோக்சபா எம்.பி.க்களாக உள்ள 37 பேரில் பலரும் பாஜக கூட்டணியை எதிர்கின்றனர். காரணம், அமைச்சர்களுக்கு எதிரான ரெய்டுகள், வழக்குகள் என இமேஜ் சம்மந்தப்பட்ட சிக்கல்களை உருவாக்கியுள்ள சூழலில் பாஜகவுடன் கூட்டணி எனில் அது பொருந்தாத கூட்டணியாக விமர்சிக்கப்படும் என்பதால்தான். இதனைத்தான் எம்.பி.க்கள் பலரும் எங்களிடம் சொல்லி வருகின்றனர். இருப்பினும், அவர்களை சம்மதிக்க வைத்து கூட்டணிக்கு ஒப்புக்கொள்ள வைக்கிறோம். 

 

ஆனால், ஒற்றை இலக்க எண்ணிக்கையில்தான் சீட் ஒதுக்கப்படும். இதற்கு சம்மதம் எனில், எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.பி.க்களை சம்மதிக்க வைக்க முடியும் என எடப்பாடி சொல்லியனுப்பிய தகவல்களை ஒப்புவித்துள்ளனர் அமைச்சர்கள். அதற்கு நிர்மலா சீதாராமனோ, தலைமைக்கு இதனை தெரிவித்துவிடுகிறேன் என்பதை மட்டும் சொல்லி அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளார் " என்று டெல்லியில் நடந்தவைகளை விவரிக்கிறது அதிமுக தரப்பு.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.