Skip to main content

 கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு விவசாய மின் இணைப்பு உடனடி...  மின்வாரிய சலுகை!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
lo


விவசாயம், மற்றும் அவை சார்ந்த சார்புத் தொழில்களுக்கு மின் இணைப்புக் கேட்டு பலர் காத்திருக்கின்றனர். நடையாய் நடந்து கால்களும் தேய்ந்து ஓய்ந்து விடுகிறார்கள். அதே போன்று தான் வீடு சார்ந்தவைகளுக்கு மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் மின் இணைப்புத் தரவேண்டும். இது போன்றவைகள் தற்போது கானல் நீராகவே மாறிக் கொண்டிருக்கிறன்றன. மாறாக மின்சாரம் அன்றி வாழ்க்கை இல்லை என்ற சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் கலப்புத் திருமணம் செய்தவர்கள் தங்களுக்கான விவசாய மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பம் செய்தால் உடனடியாக முன்னுரிமை தரப்பட்டு மின் இணைப்பு வழங்கப்படுகிற வசதியினை மின்வாரியம் தற்போது நடை முறைப்படுத்தியிருக்கிறது.

 

அதற்குத் தேவையான சில ஆவணங்களையும் குறிப்பிட்டிருக்கிறது மின்வாரியம்.

 

கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் இருவரின் சாதிச் சான்றிதழ்களுக்கான சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடமிருந்து பெற்ற சான்று ஆவணங்கள் மற்றும் நிலத்தில் இருந்து வருகிற வருவாயைக் கொண்டே வாழ்க்கை நடத்துபவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர் என்று சம்பந்தப்பட்ட தாலுகா வட்டாட்சியரிடமிருந்து சான்று பெற வேண்டும். அடுத்து விவசாய விண்ணப்பம், அதோடு கிராம நிர்வாக அலுவலர் சான்று, வரை படம், அரசு பட்டா அல்லது பத்திரம், சிட்டா, அடங்கல், தடையில்லாச் சான்று இவைகளோடு மேற்பார்வைப் பொறியாளர் ஊரக மின்மயமாக்கல் மேம்பாடு மற்றும் பகிர்மானம், அலுவலகத்தில், பதிவு செய்த சான்று ஆகியவைகள் இணைக்கப்பட வேண்டும்.

 

இவைகளனைத்தையும் கொண்ட ஆவணங்களோடு உரிய மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளரிடம் சமர்ப்பித்து உடனடியாக மின் இணைப்ப பெற வேண்டியும் சொல்லப்பட்டுள்ளது.

 

இது பெடர்பாக நாம் மின் வாரியத்தின் பகிர்மான அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியதில், இது போன்ற திட்டங்கள் வெளியே அறியப்படாமலிருந்தன. தற்போது மக்களின் நலன் பொருட்டு முன்னெடுக்கப்படுகிறது என்கிறார்கள்.

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Next Story

மீண்டும் ஒரு ஆணவக்கொலை; சென்னையில் பயங்கரம்

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Again a manslaughter; Terrible in Chennai

சென்னை பள்ளிக்கரணையில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். சல்லடையான்பேட்டை பகுதியில் சர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்த திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து நேற்று இரவு அந்த பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பள்ளிக்கரணை போலீசார் நடத்திய விசாரணையில் இது சாதி ஆணவப் படுகொலை என்பதை அறிந்து கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீண்டும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.