Skip to main content

75 வது சுதந்திர தினம்... கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 15/08/2021 | Edited on 15/08/2021

 

 75th Independence Day ... Chief Minister MK Stalin hoisted the national flag

 

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அரசு அலுவலகங்களில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற இருக்கும் நிலையில், டெல்லியில் செங்கோட்டை பகுதிக்கு தேசியக்கொடி ஏற்றுவதற்காக இந்திய பிரதமர் மோடி வந்த நிலையில், மூவர்ண தேசியக் கொடியை ஏற்றும் முக்கிய நிகழ்வு நடைபெற்றது. அதன்பிறகு நாட்டு மக்களுக்கான தனது உரையை துவங்கினார் பிரதமர் மோடி.

 

 75th Independence Day ... Chief Minister MK Stalin hoisted the national flag

 

இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திறந்தவெளி ஜீப்பில் கோட்டைக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். அதனை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். அதனையடுத்து சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

 

 

சார்ந்த செய்திகள்