Skip to main content

சென்னை விமான நிலைய அதிகாரிகள் அதிரடி! சிக்கியது 70 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்!

Published on 04/06/2021 | Edited on 04/06/2021
d

 

வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக  சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை தினமும் நடந்து வருகிறது. 

 

இந்நிலையில்,  இன்று ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது , இரண்டு ஆப்பிரிக்க நாட்டு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களிடம் விசாரணையை கடுமையாக்கினார்கள் சுங்கத்துறை அதிகாரிகள்.  அந்த விசாரணையின் போது,  முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது ஸ்ட்ராலர் பேக்கில் சுமார் 70 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.

 

இதையடுத்து போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து,  இரண்டு பெண் பயணிகளிடம் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனேவே,  கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 10 கோடி ரூபாய் மதிப்பிலான  ஹெராயின் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது . போதைப்பொருள் கடத்தல்காரர்கள்,  பார்டர் விமானத்தில் தோகா வழியாக 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தி வந்த போது தற்போது பிடிபட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த போதைப் பொருட்கள் கடந்தப்பட்டு வருவது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது.  கடந்த முறை நடந்த  ஹெராயின் கடத்தலில் பொறியாளர் ஒருவருக்கு  தொடர்பு இருந்தை  அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஒப்பந்த விமானங்கள், தோகா துபாய்,  அபுதாபி ,  மஸ்கட் ஆகிய வளைகுடா நாடுகளின் நகரங்களிலிருந்து இது வரை 72 கோடி வரை தங்கம் கடத்தி வந்த போது பிடி பட்டனர்.  மேலும் விமானத்தின் இருக்கைக்கு அடியில் சுமார 18 கிலோ போதைப் பொருளும் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.