Skip to main content

13 வயது சிறுமிக்கு பேருந்தில் வன்கொடுமை!! பள்ளி வேன் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் கைது!!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018

வாட்ஸ் அப்,பேஸ்புக் எனப்படும் சமூக வலைதள பயன்பாட்டின் விபரீதத்தால் ஈரோட்டில் 13 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஈரோட்டில் ஓடும் பேருந்தில் அந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்ற வாலிபரை போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும் சிறுமியை கடத்த துணையாக இருந்த இரண்டு இளைஞர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஈரோட்டில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

posko

 

ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த வெள்ளி வலசு பகுதியைச் சேர்ந்த பதிமூன்று வயது சிறுமி தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறாள். அதேபோல் வெள்ளோடு அடுத்த பெரும் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி வேன் டிரைவர் விக்னேஷ் (22) என்பவர் 13 வயது சிறுமியுடன் வாட்சப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் பழகி  வந்துள்ளார். 

 

 

posko

 

தனியார் பள்ளி வேன் டிரைவர் விக்னேசுக்கு ஏற்கனவே திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது. மேலும் இவர்களது பழக்கம் நெருக்கமானதை அடுத்து கடந்த 22ஆம் தேதி 13 வயது மாணவியை விக்னேஷ் தனது நண்பர்கள் ராஜபூபதி மற்றும் ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து கடத்திச் சென்றுள்ளார். இவர்கள் சென்னைக்கு சொகுசு பேருந்தில் சென்றபோது விக்னேஷ் 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில் மாணவியை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் அரச்சலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் விதத்தில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 

 

அப்போது இவர்கள் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் மாணவி உட்பட 4 பேரையும் மீட்டு வந்தனர். இந்த வழக்கு ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் அந்த மாணவியிடம் நடத்திய விசாரணையில், விக்னேஷ் தன்னை ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வேன் டிரைவர் விக்னேஷ் போக்ஷோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு துணையாக இருந்த அவரது நண்பர்கள் ராஜபூபதி, ரமேஷ் ஆகியோர் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து அவர்களையும் கைது செய்தனர்.  பள்ளி சிறுமிக்கு ஏற்பட்ட இச்சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.