Skip to main content

சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு காங்கிரச் கமிட்டி டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு! (படங்கள்)

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்க எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். 

 

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார் எம்.பி., துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, பொன். கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூட்டாக புகார் மனுவை அளித்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்