Skip to main content

“ஓரணியில் இணைவோம்” - டிடிவி தினகரன்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

"Let's unite as one team" TTV Dhinakaran

 

“ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைவோம்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “துரோகம் என்ற கத்தியை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். அந்த கத்தியாலேயே அவர் எழுதப்படுவார். இரட்டை இலை இருந்தும் ஆளுங்கட்சிக்கு இணையாக செலவு செய்தும் கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என மார்தட்டியும் திமுக மீது கடுமையான அதிருப்தி இருக்கின்ற போதும் திமுகவால் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற முடிகிறது. இரட்டை இலை இல்லாமல் போயிருந்தால் பழனிசாமி அண்ட் கோ வின் நிலை என்ன ஆகி இருக்கும். இரட்டை இலை பழனிசாமி கையில் இருந்தாலும் அது பலவீனப்பட்டு விடும். ஒரு கட்டத்தில் இரட்டை இலையின் செல்வாக்கு இல்லாமல் போய்விடும். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்து திமுகவை வீழ்த்திய பின் அதை மீட்டெடுப்போம். பழைய செல்வாக்கை அதிமுக அடையும். 

 

ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் இணைவோம். அதுபோல திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைக்கிற இயக்கங்களுடன் கூட்டணி வைத்து திமுகவை வீழ்த்தி ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். எம்ஜிஆர் அதிமுகவை துரோகத்தை எதிர்த்து தொடங்கினார். அந்த இயக்கத்தை துரோகம் தான் தலைமை தாங்குகிறது. அந்த துரோகம் காலத்தால் வீழ்த்தப்படும். அந்த காலம் வருகிறது என்பது என் எண்ணம்” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்