Skip to main content

நீடிக்கும் இழுபறி... நாளை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை!

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

Congress executives consult tomorrow

 

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக 15 இடங்கள் கேட்டு விருப்ப பட்டியலைக் கொடுத்துள்ளதாகவும், அதில் 9 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என விசிக கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் காங்கிரஸ் 30 தொகுதிகளைக் கேட்டுள்ளதாகவும், அதில் 24 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. திமுகவைப் பொறுத்தவரை, கூட்டணிக் கட்சிகளுக்கு 54 தொகுதிகளும், மீதமுள்ள 180 தொகுதிகளில் தாங்களே போட்டியிட உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்நிலையில், திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், நாளை (04.03.2021) சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். தினேஷ் குண்டுராவ், வீரப்பமொய்லி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் இந்த அவசர செயற்குழு கூட்டத்தில் பங்குபெற இருக்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்