Skip to main content

2 தலை, 3 கைகளோடு பிறந்த குழந்தை!

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

மத்தியபிரதேச மாநிலம் விடிவா மாவட்டத்தில் உள்ள சுஜா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்வந்த் ஆஹிர்வார். கூலித் தொழிலாளியான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவரது மனைவி கர்ப்பம் அடைந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 

jh



இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை 2 தலை, 3 கைகள், 3 கைகளில் 4 உள்ளங்கைகள் இருந்ததை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து குழந்தையை தீவிர சிகிச்சை கண்காணிப்பு பகுதியில் அனுமதித்துள்ளனர். குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்