Published on 03/08/2021 | Edited on 03/08/2021

தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை யாரிடமும் எழவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த குறிப்பிட சிலர் பேசிவந்த நிலையில், மத்திய அரசு அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.