Skip to main content

”பிரனாயை வேண்டுமானாலும் அழிக்கலாம், அவரின் காதலை அழிக்க முடியாது” - இறுதி ஊர்வலத்தில் இளைஞர்கள் குமுறல்

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
telungana


செப்டம்பர் 15ஆம் தேதி தெலுங்கானாவில் ஆணவக்கொலையில் பலியான பிரனாயின் இறுதி சடங்கு அவரது ஊரில் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பிரனாயின் உடல் டிராக்டரில் வைத்து எடுத்துசெல்லப்பட்டது, அப்போது அவரது உடல் அருகேயெ அவருடைய மனைவி அமர்ந்திருந்தார். ”நீங்கள் பிரனாயை வேண்டுமானாலும் அழிக்கலாம், அவரின் காதலை அழிக்க முடியாது”,”எத்தனை முறை இதுபோன்ற அட்டூழியங்கள் நடக்கும், இந்த அட்டூழியத்தால் எத்தனை பேரை இழக்கபோகிறோம்” என்கிற வரியை தெலுங்கில் ஒரு இளைஞர் பாட, அவருடன் இருக்கின்ற இளைஞர்கள் ஒருசேர அந்த வரியை வலியுடன் பாடினர். இந்த இறுதி ஊர்வலத்தை சிலர் பேஸ்புக் லைவில் சாதி என்னும் அழுக்கால் நடந்த கொடூரம் என்ற பெயரில் மேற்கோளிட்டு காட்டினர். தலித் இயக்கத்தைச் சேர்ந்த சில தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் இதில் கலந்துகொண்டனர்.
 

தற்போது இந்த ஆணவக்கொலையில் மாஜி எம்எல்ஏ ஒருவர் ஈடுபட்டிருப்பதகாவும் கூறுகின்றனர். அதேபோல அம்ருதாவின் தந்தையும், ”என் மகள் என் பேச்சை கேட்கவில்லை அதனால் என் சொத்தே அழிந்தாலும் பரவாயில்லை என்று கூலிப்படையில் ஆள் வைத்து கொலை செய்தேன்” என்று கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்த பெண்; நம்பிச் சென்ற பா.ஜ.க பிரமுகருக்கு நேர்ந்த கொடூரம் 

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
The incident that happened to a trusted BJP administrator in telungana

தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் நகரில் உள்ள சிங்கப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு(36). தொழிலதிபரான இவர், சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.க. கட்சியில் இணைந்திருக்கிறார்.

இந்த நிலையில், யூசுப்குடா பகுதியில் ராமு பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்துள்ளார். அவருடைய அந்தரங்க உறுப்புகளிலும் காயங்கள் இருந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பிணமாகக் கிடந்த ராமுவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அங்கு இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், கொலை செய்யப்பட்ட ராமுவின் செல்போன் அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். அதில், சம்பவம் நடந்த அன்று நள்ளிரவு நேரத்தில் ஒரு பெண் ராமுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டது தெரியவந்தது. அதன் பேரில், அந்த செல்போன் எண்ணைக் கொண்டு, அந்த பெண்ணைப் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அதில், அந்த பெண் ராமுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யூசப்குடா பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, இரவு நேரத்தில் ராமு அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, அந்த பெண் உள்பட 8 பேர் கொண்ட கும்பல் ராமுவை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

மேலும், இந்த சம்பவத்தில் பா.ஜ.க பிரமுகரும் தொழிலதிபருமான ராமுவின் முன்னாள் நண்பரான மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்த நிலையில், தலைமறைவான அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சமீபத்தில் ராமுவுக்கும் மணிகண்டனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதில் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தஞ்சை ஆணவக்கொலை; விசாரணை செய்த காவல் ஆய்வாளர் மீது அதிரடி நடவடிக்கை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Action taken against police inspector who investigated for Tanjore incident

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். 

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர். 

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

இந்த நிலையில், ஐஸ்வர்யாவை காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையா, ஐஸ்வர்யாவை அவரது விருப்பத்திற்கு மாறாக பெற்றோருடன் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு காரணமாக, பல்லடம் காவல் ஆய்வாளர் முருகையாவை கோவை சரக டிஐஜி சரவணசுந்தர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.